Tenkasi

News October 10, 2024

முதியவர் கொலையில் 10 பேர் சிறையில் அடைப்பு

image

சங்கரன்கோவில் அருகே சமுத்திரபாண்டி(70) என்பவரின் இறுதிச் சடங்கின்போது உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியதில் வேலுச்சாமி என்பவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 22 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.

News October 10, 2024

பண்பொழி கோயிலில் சுமங்கலி பூஜை

image

தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி நகரீஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக நாளை(அக்.,11) பதினோராம் தேதி சுமங்கலி பூஜை நடக்கிறது. இதனையொட்டி நாளை கும்ப பூஜை மகா அபிஷேகம், 108 சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. 108 பெண்கள் கோயிலில் முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டது. SHARE IT.

News October 10, 2024

தென்காசி ரேசன் கடைகளில் வேலை! APPLY பண்ணுங்க

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கி வரும் ரேசன் கடைகளில், விற்பனையாளர் & கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>‘CLICK’<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News October 10, 2024

புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 180020211989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

தொழில் மனைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழில்பேட்டையில் 51 தொழில்மனைகள், ஒரு வணிகமனை ஆகியவை ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது. புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

ஆலங்குளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெபராஜன் என்பவர் நேற்று தனது தோட்டத்திற்கு சென்ற போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் எதிர்பாராத விதமாக ஜெபராஜன் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News October 9, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.09) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது.‌ மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

ரேசன் கடை காலிப்பணியிடங்கள்

image

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்கள் (12 தேர்ச்சி), கட்டுநர்கள் (10 தேர்ச்சி ) காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் https://www.drbtsi.in என்ற இணையதளத்ஹ்டில் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம்.

News October 9, 2024

ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி: 1930-க்கு CALL பண்ணுங்க!

image

தென்காசி மாவட்ட காவல்துறை இன்று விடுத்துள்ள அறிக்கையில், சமீப காலமாக ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனையில் மோசடி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக தங்களின் பணம் ஏமாற்றப்பட்டால், 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் புகார் செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

News October 9, 2024

தென்காசியில் பணியாளர் தேர்வு அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் நேற்று(அக்.,8) வெளியிடப்பட்ட அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தென்காசி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகை கூட்டுறவு சங்கங்களில் 40 விற்பனையாளர் & 11 கட்டுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் www.drbtsi.in இணையதளத்தில் நவ.,11க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!