India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-222312 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சுடலைமுத்து (55). இவர் கடந்த 13ம் தேதி கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் முருகன் (52). இவருக்கும் சில்வார்குளம் பகுதியில் செயல்படும் காற்றாலை நிறுவனத்திற்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காற்றாலை மேலாளர் பாலாஜிக்கும், கதிர்வேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கதிர்வேல், பாலஜியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர்.

தென்காசி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

சிவகிரி அருகே ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (23). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் நேற்று முந்தினம் தனது பெற்றோர் வீட்டில் தூங்க சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், வாசு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்

தென்காசி மாவட்ட மக்களே ஜன. 24 முதல் cctns-2. 0வில் மனு (csr) மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் சில ஆவனங்கள் கொண்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குடும்ப அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக கொண்டு எடுத்து வர வேண்டும் என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று (ஜன.24) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.