India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அக்.,23ஆம் தேதி புளியரை சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளதாக, இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிவகிரி கலைஞர் அறிவாலயம் கட்டிட குழுவின் தலைவர், தீர்மான குழு உறுப்பினர் சரவணன், நிதி குழு உறுப்பினர்கள் சீனிவாசன், டாக்டர். செண்பக விநாயகம் (மாநில மருத்துவ அணி துணை செயலாளர்), பொன்முத்தையா பாண்டியன் (வாசு ஒன்றிய பெருந்தலைவர்) உள்ளிட்ட 15 பேரை நியமனம் செய்து” அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் நேற்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், “தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் நியமனத்திற்கான நேர்காணல் தென்காசி மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தென்காசி மாவட்டத்தில் நீர் பாசன வசதி உள்ள விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய வன சோழ விதைகள் மற்றும் வேலி மசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்கு சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர் அல்லது கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தென்காசி எஸ்பி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். அப்போது, தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்று கண்டுபிடித்திருந்த மாணவனின் திறமையை பாராட்டினார். உடன் கல்லூரி நிர்வாகி புதிய பாஸ்கர் இருந்தார்.
தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை கோல்டன் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகிக்கிறார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நாளை (அக்-17) 11ம் நாள் நிகழ்ச்சியாக மதுரை முத்து வருகை தருகிறார். தொடர்ந்து, நாளை மாலை 6 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் மாபெரும் யாழ் இன்னிசை மட்டும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
தென்காசியில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடத்தின் ராபிய பருவத்திற்கான பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மத்திய, மாநில அரசுகளால் தற்போது அறிவிக்கப்பட்டது. பயிர் காப்பீடு வசதி தற்போது அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் தொகை மட்டுமே செலுத்த வேண்டும், கூடுதல் கட்டணம் கிடையாது என்றார்.
ஆலங்குளம் அருகே கண்டபட்டியை சேர்ந்தவர் லாரன்ஸ்(24) எலக்ட்ரீசியன். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக பணி செய்து வந்த இவர், நேற்று(அக்.,15) முக்குடை அடுத்த தென்திருபுவனம் அருகில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உரை கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாய்ஸ் ஆப் தென்காசி அமைப்பு சார்பில் டிஜிட் ஆல் தென்காசி துவக்க விழா வருகிற 20ஆம் தேதி குற்றாலம் சாலை அருணா மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரபல மென்பொருள் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, டிஜிட்டல் பாலிடிக்ஸ் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் ஐயா சாமி நேற்று கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.