India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(அக்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், சீர் மரபினர் இனத்தினை சார்ந்த 18 – 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு சீர் மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான முகாம் வருகிற அக்.24-ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். (SHARE IT)
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று(அக்.,19) வருகை தந்த திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சமூகநீதி கண்காணிப்புக்குழு சுப.வீரபாண்டியனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்து 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை மாலை வேலைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று(அக்.,18) ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் மெயின் அருவி கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணிக்கு ஒன்றிய நகர பேரூர் பகுதிகளில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான நேர்காணல், நாளை(அக்.,19) சங்கரன்கோவில் திமுக அலுவலகத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
தென்காசி எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொட்டல்புதூர் பள்ளிவாசலில் கடந்த 04.10.2024 முதல் 17.10.2024 வரை 14 நாட்கள் நடந்து முடிந்த கந்தூரி விழாவினை எந்த ஒரு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகள் இல்லாமல் சிறப்பாக நடத்தி முடித்த காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்தார். மேலும் இதேபோல் தொடர்ந்து செயல்பட கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான சிவகாசி சட்டமன்றத்தொகுதி பார்வையாளராக திமுக சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று(அக்.,17) தமிழக நிதித்துறை மற்றும் காலநிலை சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம்(அக்.,17) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மதிப்பீட்டு குழு தலைவர் உள்ளிட்ட குழுவினர் தென்காசி மாவட்டத்தில் 24.10.2024 அன்று கால ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், பொதுமக்கள் குறைகள் குறித்து மனுக்கள் வழங்கவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம், சுரண்டை மார்க்கத்தில் மினி பேருந்துகள் தனியார் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக செல்லும் தனியார் மினி பேருந்தில் புதிதாக அறிவிப்பு ஒன்றை பேருந்தில் முன் பகுதியில் ஒட்டியுள்ளனர். அதில் ‘மதுக்கூடம் நிறுத்தம்’ என டாஸ்மாக் கடை ஸ்டாப் உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தை சேர்ந்த, யோகா ஸ்கேட்டிங் மூலம் பல்வேறு பதக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய சகோதரிகள் மிஸ்பா நூருல், ஹபீபா ஷாஜிதா ஆகியோருக்கு கடந்த வாரம் சென்னையில் அமைச்சர் முத்துசாமி சாதனையாளர் விருது வழங்கினார். தொடர்ந்து இன்று(அக்.,17) தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவ பத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.