Sivagangai

News September 26, 2024

சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 05.10.2024 அன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை நாடுவோர் https://tinyurl.com/svgcandidatereg என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

image

மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் காவல் நிலைய எஸ்ஐ ராகார்ஜுனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது செய்களத்தூர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் (19) சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று (செப்.25) கைது செய்து 66 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News September 25, 2024

காரைக்குடியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

image

திருப்பதி திருமலையில் பிரம்மோதஸவம் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரம்மோத்ஸவம் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்காக காரைக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருப்பதிக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் அக்.10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 25, 2024

தேவகோட்டையில் ரூ. 250 கோடி நிதி மோசடி

image

தேவகோட்டையில் தனியாா் நிதி முதலீட்டு நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10000 வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. நிறுவனத்தில் உறுப்பினா்களாக சோ்ந்த 2,500 பேரிடம் மொத்தம் ரூ. 250 கோடி வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.250 கோடி மோசடி செய்ததாக
அதன் நிா்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தி சீல் வைத்தனா்.

News September 25, 2024

சிவகங்கையில் நாளை எங்கெல்லாம் மின்தடை ?

image

புதுவயல், அழகாபுரி, சாக்கோட்டை, வீரசேகரபுரம், கருநாவல்குடி, பெத்தாச்சி குடியிருப்பு, பீர்க்கலைக்காடு, விளாரிக்காடு, ஜெயங்கொண்டான், வேங்காவயல், மணக்குடி, சிறுகவயல், சாக்கவயல், நமித்ராவயல், செம்பிலான் வயல், சுட்டி நெல்லிப்பட்டி, மாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை (செப் 26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 25, 2024

கிராவல் குவாரியில் ரூ.1,60,000 பறித்த 4 பேருக்கு வலை

image

மாடக்கோட்டை கிராமத்தில் கிராவல் குவாரியில் சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்த கேசவன்(49) மேற்பார்வையாளராக உள்ளார். நேற்று கேசவனும் குவாரியில் பணிபுரியும் ஆரோக்கிய திரவியம் என்பவரை மர்ம நபர்கள் வாளை காட்டி மிரட்டி குவாரியில் இருந்த ரொக்கம் ரூ.1,60,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருக்கின்றனர்.

News September 25, 2024

சிவகங்கையில் நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் 2022-23 மற்றும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர மீண்டும் ஒரு அறிய வாய்ப்பாக நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம் இன்று நடைபெற உள்ளது. மேலும் கல்விக்கடன், கல்லூரியில் சேர உடனடியாக அட்மிஷன் போன்றவைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News September 24, 2024

சிவகங்கையில் விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டில் தொழிற்கல்வியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன்/ மகள் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.ksb.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக வருகின்ற 30.11.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

சிவகங்கையில் ஒரு லட்சம் காசோலை – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் சான்றிதழ், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.   

News September 24, 2024

தேய்ப்பு பெட்டிகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(ம)சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவை தொழிலாளர்களுக்கு புதிய முன்னெடுப்பாக திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்(ம)சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!