India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மடப்புரம் அஜித்குமார் வழக்கில், சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், உயர் அதிகாரி உத்தரவிட்டால் அடித்துக் கொல்வதா? சட்டவிரோதமாக செயல்பட முடியாது என சொல்லுங்கள் எனவும், உங்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்ட மக்களே; நீங்க வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடிக்கும்போது அடுத்து வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <

சிவகங்கை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் மற்றும் சாலை கிராமம் ஆகிய துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (பிப்.17) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.புதூர், புழுதிப்பட்டி, உலகம்பட்டி , நெடுமரம், கட்டுக்குடிப்பட்டி, சாலைக்கிராமம், அய்யம்பட்டி, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், அளவிடங்கான், பூலாங்குடி சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் இருக்காது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் ரஷீத்கான் என்பவர் சிலம்பத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நேற்று (15.02.26) சென்னை பொத்தேரியில் நடைபெற்ற கின்னஸ் சாதனைக்கான சிலம்ப நிகழ்ச்சியில் 4 மணி நேரம் 10 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்து சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <

சிவகங்கை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தாட்கோ www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
Sorry, no posts matched your criteria.