India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன மதுரை கிளையின் சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான ‘லீன்’ திட்டம் குறித்த விழிப்புணர்வு அக். 15 அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலயத்தின் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.05) இரவு அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் வீரை கவிராஜ பண்டிதருக்கு பாலா ஸ்வரரூபமாக காட்சியளித்தார். ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை சிட்கோ தொழிற்பேட்டையில் 8 தொழில் மனைகள், காரைக்குடியில் 165, கிருங்காக்கோட்டையில் 52 தொழில் மனைகள் காலியாக உள்ளன. புதிதாக தொழில் துவங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசனூர் பகுதியில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணிந்து ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக வட்டமாக அமர்ந்து ஒன்பது நபர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்தனர். அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூ.900 பணம் மற்றும் 52 சீட்டு கட்டுகளை கைப்பற்றினர்.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டைகளில் காலியாகவுள்ள தொழில்மனைகளுக்கு, புதிதாக தொழில் தொடங்க, தொழில்மனைகள் வாங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (அக்.4) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 மாத கால முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் படிப்பு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்த படிப்பிற்கு,
விருப்பமுடையவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன்
நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (அக்.4) தெரிவித்துள்ளார் .
காரைக்குடி அழகப்பா பல்கலையில் 2016 – 18ம் ஆண்டு வரை எம்.பில் வகுப்புகள் நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்.பட்டம் பெற்றனர். இந்த எம்.பில்., படிப்பு யு.ஜி.சி அங்கீகாரம் பெறாதது, எனவே இது செல்லாது என கல்வித்துறை தணிக்கை குழு தெரிவித்ததோடு ஊதிய உயர்வை கட் செய்ததாக கூறி 200க்கும் மேற்பட்டோர் பல்கலை கழக நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50% மானியத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் வருகின்ற 12ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 04575 243717 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (அக்.3) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 5ஆம் தேதி
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://tinyurl.com/svgcandidatereg என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (அக்.3) தகவல் தெரிவித்துள்ளார்.
மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மின்தடை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அறிிக்கப்பட்டுள்ள பகுதிகள் மதகுபட்டி துணை மின் நிலையம் உட்பட்ட மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சிபட்டி, நாமனுார், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பேரணிப்பட்டி, ஒக்கூர், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, கருங்காப்பட்டி & சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.