India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், தமிழில் பெயர் பலகை இல்லாத 9 கடை நிறுவனங்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த புயல் உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களான மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2024-2025 மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை
கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்யும் திட்டமானது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(அக்.16) தகவல் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை பதிவு மற்றும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் நவ.15ஆம் தேதி அன்று பிற்பகல் 4 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு Mahindra Bolero வாகனங்களை பொது ஏலமிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுப்போர் ரூ.1000/- வைப்புத் தொகையினை ஏலம் நடைபெறவுள்ள தேதி அன்றே செலுத்தி தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தில் 2 அரசு மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இக்கடைகள் பேருந்து நிலையத்திற்கு முன்பு இருந்ததால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பெண்கள், மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இது தொடர்பாக ராதா கிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இரண்டு கடைகளையும் மாற்ற உத்தரவிட்டார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவாக குறுவள மைய ஊழியர்கள் 118 பேருக்கு, பிரதான மைய ஊழியராகவும்,பிரதான மைய உதவியாளர் 39 பேர்களுக்கு, பிரதான மைய பணியாளராக பதவி உயர்வு வழங்கி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உத்தரவிட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று (அக்.14&15) காலை 6 மணி வரை பெய்த கன மழையின் அளவுகள் சிவகங்கை 57 மி.மீ, மானாமதுரை 21.00 மி.மீ, இளையான்குடி 18.00 மி.மீ, திருப்புவனம் 9.20 மி.மீ, திருப்பத்தூர் 27 மி.மீ,
காரைக்குடி 19 மி.மீ, தேவகோட்டை 19.60 மி.மீ, காளையார்கோவில் 58 மி.மீ, சிங்கம்புணரியில் 27.20 மி.மீ, மொத்தம் 256 மி.மீ மழை சிவகங்கை மாவட்டத்தில் பெய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகையுடன் தொழில் செய்து முன்னேறவும், தொழில் முனைவோராக வளரவும் அரசு உதவிட வேண்டும் என அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசு அலுவலக இடங்களில் வாடகை, டெபாசிட் இன்றி ஆவின் பாலகம் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தகவல்.
Sorry, no posts matched your criteria.