India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 223 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்துார் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, சிவகங்கை டவுன், மதகுபட்டி மதுபானக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் சேவை தொடங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி – ஷாலிமர் மற்றும் தாம்பரம் – சந்திரகாசி ஆகிய இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை ,சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய வழியாக சென்னை செல்லும் நிலையில் இது விரைவில் பொதுமக்களின் பயன்பாட்ரிற்கு வரவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகளை சேர்ந்த 263 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் தேவகோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகள் என மொத்தம் 124 ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.
சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலையில் ஆண் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கட்டுமானத்திற்கு குவிக்கப்பட்ட மணலில் குழந்தையின் கழுத்து, கை நரம்பு அறுபட்டு (அக்.222) தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான சிங்கம்புணரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் இன்று தெரிவித்துள்ளார்.
சீர்மரபினர் நல வாரியத்தில், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம் வருகின்ற 24.10.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், சீர்மரபினர் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை காளையார்கோவில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் முன்பாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான மாமன்னர் மருதுபாண்டியர்கள் கலையரங்கத்தை சிவகங்கை எம்எல்ஏ PR.செந்தில்நாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள். உடன் அதிமுக ஒன்றிய கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நேற்று சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் 21 ஜோடிகளுக்கு அரசின் சார்பில் நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இக்கோயிலில் ஆதிதிராவிடர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர் இந்நிலையில் நேற்று நடந்த திருமணவிழாவில் அரசு சார்பில் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை
சிவகங்கை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், தமிழில் எழுத படிக்க தெரிந்த, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 07.11.2024-க்குள் <
Sorry, no posts matched your criteria.