India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் பொருட்டு, சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் நாளை(நவ.15) காலை 10:30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் வருகிற நவ.16,17, மற்றும் 23, 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், வேலைவாய்ப்பு முகாம் நாள் (நவ.15)(வெள்ளிக்கிழமை) இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு [ம] தொழில்நெறி வழிகாட்டும் மையம்.10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,இ.ஆ.ப.,தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என மனுதாரர் தடுப்பணை கட்டுவது குறித்து புதிதாக மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனக்கூறி சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதனின் இடையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று (நவ.13) சிவகங்கை CITU டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பாக, டாஸ்மாக் மேலாளர் ஊழியர் விரோதப் போக்கையும், ஊழல் முறைகளை கண்டித்தும் துறைவாரி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சிவகங்கை CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் மாறன் தலைமை வகித்தார்.
சிவகங்கை மாவட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் வதின் மாநில அளவிலான தடகளப் போட்டியில் 1500மீ பிரிவில் கலந்து கொண்டு விளையாடி தங்கம் வென்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார் வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள், வரும்(நவ.16) அன்று மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறவுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு 0452 2566420 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9786341558 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று(நவ.12) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத்தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in என்ற இணையதள முகவரியிலோ 04575-240521 அல்லது Child Help line 1098 தொலைபேசி எண்களின் வாயிலாகவோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (நவ.12) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் IIT,IIM,IIIT,NIT, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச்சேர்ந்த (BC,MBC,DNC)வகுப்பைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் . https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் பட்டயக்கணக்காளர் – இடைநிலை, நிறுவன செயலாளர் – இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை ஆகிய போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச்சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று(நவ.12) தெரிவித்துள்ளார். (பகிரவும்*SHARE)
Sorry, no posts matched your criteria.