India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆடியோ மூலம் அறிவித்துள்ள இந்த பதிவில், சாலைகளில், தெருக்களில், வயல் வழிகளில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆடு மாடு போன்ற கால்நடைகளை மின்சார கம்பத்தில் கட்ட வேண்டாம் எனவும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியின் அடிப்படையில் https://award.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வரும் 15.12.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (நவ.21) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவ.21) காலதாமதமாக வந்த மாணவிகளுக்கு அபராதம் விதித்த ஆசிரியர்களை தாக்க மர்ம கும்பல் முயற்சித்துள்ளனர். மேலும் பள்ளிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஆசிரியர்களை திடீரென தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம கும்பலைக் கண்டு மாணவர்கள் ஓட்டம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே சிறுவர், சிறுமியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நலக்குழு அளித்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெரியசாமியை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும், சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என சிவகங்கை நகராட்சி, மாவட்ட ஆட்சியர், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்தில் பதில் அளிக்காவிட்டால், அதிக அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டாக் கட்டியில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு மின் விநியோகம் இல்லை. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், எஸ்.வி. மங்கலம் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் மின் மாற்றியை ஆய்வு செய்தபோது, அதிலிருந்து 110 கிலோ காப்பர் கம்பிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி நீதிமன்றக்காவலில் உள்ள ச. முத்துக்குமார், பூ.வில்வக்குமார், மு. தவமுனியசாமி, த. ராமசாமி, மபோ.அஜய்குமார், போக்ஸோ வழக்கில் கைதான குற்றவாளிகளான துவரங்குறிச்சி சி.ராசு, முருகேசன் ஆகிய 7 பேரை காவல்துறை பரிந்துரையின்பேரில் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவிட்டார்.
திருப்பத்தூரில் கிராமங்களில் போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை ஏதும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் மற்றும் கூலிப், புகையிலை விற்றால் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையுடன் சேர்ந்து ஆய்வு செய்து கடைக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் 4,062 குழந்தைகள் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், சிறப்பு ஊட்டச்சத்து உணவு, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டு, ஊட்டச்சத்து நிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் ஆட்சியா்.
மானாமதுரை முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவு சார்பில் வரும் நவ.27ஆம் தேதி வரை சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் நவீன முறையில் பெண்களுக்கான் லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. எனவே தேவைப்படுவோர் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.