India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவகோட்டையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த ட்ரூவே பிஸ்னஸ் செர்விஸ் பிரைவேட் லிமிட் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி தெரிவித்தார். முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி புகார் அளிக்கலாம்.
சிவகங்கையில் தீபாவளியன்று நடந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (40) மற்றும் களத்துார் பெண் லட்சுமி (60) ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் மணிகண்டன் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநில செயலாளர் கிருஷ்ணசாமி மாநில முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
காரைக்குடி அருகேயுள்ள கண்டனூர் பேரூராட்சியில் எப்எப்சி நண்பர்கள் கால்பந்து கழகம் சனிக்கிழமை நடத்திய கால்பந்து போட்டியைப் பார்வையிட வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒரு முறை வாக்களிப்பவர்கள் மறுமுறை வாக்களிப்பதில்லை. அவருக்கு என நிரந்தர வாக்கு வங்கி இல்லாததால், விஜய் வருகை அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார்.
தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர்,தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் இடி,மின்னலுடன் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகில் உள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தில் இறந்த கோவில் காளையின் நினைவாக இன்றுகண்டாங்கிபட்டி கண்மாயில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 20 மாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று போட்டியை கண்டு ரசித்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
சிவகங்கை களத்துாரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் கொலை செய்தனர்.நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு கீழவாணியங்குடி கண்மாய் கரையில் அமர்ந்திருந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டனை 40, வாள்களுடன் ௨ டூவீலரில் வந்த 6 பேர் வெட்டிவிட்டு தப்பினர். மணிகண்டன் பலியானார்.சிவகங்கை எஸ்.பி.,டோங்கரே பிரவீன் உமேஷ் கூறியதாவது: இரு கொலை சம்பவங்கள் குறித்து தனித்தனி விசாரணை நடக்கிறது என்றார்.
சிவகங்கை மாவட்டம் களத்துாரை சேர்ந்த சிங்கம் மனைவி லட்சுமி 60. மகன் ஜெயபாண்டி 40. சில நாட்களுக்கு முன் மலேசியா சென்றார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு லட்சுமி வீட்டிற்கு வந்த கும்பல், அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பினர்.நேற்று காலை வீட்டை விட்டு லட்சுமி வெளியே வராததால் கிராமத்தினர் சென்று பார்த்தபோது, லட்சுமி இறந்து கிடந்தார். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தொண்டி-தேவகோட்டை சாலை அருகே சி.கே.மங்கலம் கிராமத்தில் இன்று அவ்வழியே சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் பாய்ந்தது. மழைநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட கால்வாயில் தேங்கி இருந்த தண்ணீரில் கார் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (12 ). இவர் நேற்று (அக்.31) அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின்சார வயர் அறுந்து சிறுவனின் மேல் விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.