Sivagangai

News March 11, 2026

BREAKING மானாமதுரை: ஆகாஷ் மரணத்தில் அதிர்ச்சி தகவல்.!

image

மானாமதுரை ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், நீதித்துறை நடுவர் ரிமாண்ட் அறிக்கையில் இரும்பு கம்பியால் காலை உடைத்தது போலீஸ் தான் என்றும், கீழே விழுந்து உடைந்ததாக பொய் சொல்ல சொன்னதாக ஆகாஷ் வாக்குமூலம் அளித்ததாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் உண்மை எனில் வழக்கின் பிரிவுகள் மாற்றப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். SC, ST பிரிவில் வழக்கு பதிய சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.

News March 11, 2026

சிவகங்கை: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

image

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News March 11, 2026

சிவகங்கை: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

image

சிவகங்கை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

சிவகங்கை: ஆசிரியர்கள் கடத்தல்; 2 பேர் கைது

image

தேவகோட்டை ராம்நகரை சேர்ந்தவர் அருள்செழியன். இவரது மனைவி சாந்தி மெர்சி கிரேஸ். இருவரும் ஆண்டாவூரணி தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். இருவரும் பள்ளிக்கு காரில் சென்றபோது நான்கு பேர் காரை மறித்து அருள் செழியனை மிரட்டி மற்றொரு காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதோடு மதுரையில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் ராம்நகரை சேர்ந்த பாரதிராஜா, கோவிந்தராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர்

News March 10, 2026

சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News March 10, 2026

சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News March 10, 2026

சிவகங்கை: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்; இந்த நம்பர் போதும்!

image

சிவகங்கை மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News March 10, 2026

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்.!

image

சிவகங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News March 10, 2026

JUST IN மானாமதுரை பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.!

image

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அவரது உறவினர்கள் 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. MLA மற்றும் அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் 3 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

News March 10, 2026

சிவகங்கை: ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் கண்ணன் நேற்று, திமுக மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கை மாறன் முன்னிலையில் கட்சி ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைத்து கொண்டார். சேர்மன் சேங்கை மாறன் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். உடன் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

error: Content is protected !!