Sivagangai

News March 14, 2026

இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ள அதிகாரிகள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (13.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2026

BREAKING சிவகங்கை: 6 காவலர்கள் சஸ்பெண்ட்

image

மானாமதுரை அருகே தகராறு வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் தேவேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகிய 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 13, 2026

சிவகங்கை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறுவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

BREAKING மானாமதுரை ஆகாஷ் உடலில் 28 காயங்கள்..!

image

மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரத்தில், ஆகாஷ் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வலது கால் நடுப்பகுதி தசை, முழங்கை, முழங்கால், மூளை அடிப்பகுதியில் ரத்த கசிவு, நுரையீரல் வீக்கம் உட்பட 28 இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தாக்குதலில் ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

News March 13, 2026

சிவகங்கை: டிகிரி போதும்; ரூ.65,000 சம்பளத்தில் BANK வேலை.!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 13, 2026

சிவகங்கை: அதிமுகவில் இணைந்த OPS அணியினர்

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓபிஎஸ் அணியினை சேர்ந்த உதயனூர் பொன்னுதுரை, கல்லனி மோகன் ஆகியோர் ஏற்பாட்டில் பலர் இன்று சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் PR.செந்தில்நாதன் தலைமையில் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் K.M.கோபி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 13, 2026

மானாமதுரையில் மீண்டும் அரங்கேறிய சம்பவம்.!

image

மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், நேற்று இரவு மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் ரோட்டில் நின்றதால் அவரை ஓரமாக நிற்க கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனி அரிவாளால் கார்த்திகேயன் முகத்தில் வெட்டினார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் பழனியை தேடி வருகின்றனர்.

News March 13, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (12..03.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 12, 2026

சிவகங்கை: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 12, 2026

சிவகங்கை: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள் அறிவிப்பு

image

சிவகங்கை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!