India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூரில் கிராமங்களில் போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை ஏதும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் மற்றும் கூலிப், புகையிலை விற்றால் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையுடன் சேர்ந்து ஆய்வு செய்து கடைக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் 4,062 குழந்தைகள் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், சிறப்பு ஊட்டச்சத்து உணவு, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டு, ஊட்டச்சத்து நிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் ஆட்சியா்.
மானாமதுரை முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவு சார்பில் வரும் நவ.27ஆம் தேதி வரை சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் நவீன முறையில் பெண்களுக்கான் லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. எனவே தேவைப்படுவோர் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 19.09.2024 அன்று இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த விளாக்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், வில்வகுமார், ராமசாமி, அஜய்குமார், தவமுனியசாமி ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை குண்டர் தரப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் நேற்று (நவ.19) உத்தரவிட்டார்.
கறவை மாட்டு பண்ணையம் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் வகுப்பறை பயிற்சியுடன் செய்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 6374543121 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் சரவணன் ஜெயம் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.09.2024 அன்று துவரங்குறிச்சியை சேர்ந்த ராசு மற்றும் முருகேசன் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று (நவ.19) சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று(நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். *பகிரவும்*
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தைச்சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் வீட்டுக்கு பட்டா வாங்கி தருவதாக அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் வி.ஏ.ஓ ராக்கு என்பவர் ரூ.3000 Gpay வாங்கிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. குழந்தைகள் தினத்தன்று(நவ.14) சிறந்த பள்ளிக்கான கேடயம், பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கரங்களில் விருதினை வழங்கி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று(நவ.19) வாழ்த்து பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.