India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1,199 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலமாக 45,492 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சளியுடன் கூடிய காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 285 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளில் நேற்று, இன்று வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்தனர்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு சீறுடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மிளகனூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஆதீஸ்வரன் சுயநினைவின்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பாம்பு கடித்ததற்கான அறிகுறி இருப்பதைக் கண்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று(நவ.23) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1,199 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலமாக 45,492 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சளியுடன் கூடிய காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 285 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
காரைக்குடி அரசு மருத்துவமனையில் நவ.26 & நவ.28 ஆகிய இரு தினங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், உள்ளிட்ட ஆவணங்களின் நகல் கொண்டு சென்று பதிவு செய்து பயன் கொள்ளுமாறு உழைக்கும் தகவல் தெரிவித்தனர்.
*பகிரவும்*
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை கிணங்க நடப்பு 2024-2025ஆம் ஆண்டில்,சம்பா (நெல்-II) நெற்பயிர் காப்பீட்டிற்கென, வருகின்ற(நவ.30)வரை நீட்டிக்கப்பட்டுள்ள காலவரம்பிற்குள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.23) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்,பாலின பாகுபாடு தொடர்பான பிரச்சனைகளை களைவது குறித்த சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கென, பாலின வள மையங்கள் (GRC) சிவகங்கை, மானாமதுரை மற்றும் சிங்கம்புணரி வட்டாரங்களில் வருகின்ற 25.11.2024 முதல் செயல்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தாலுகா, காளையார் கோவில், இளையான்குடி, காரைக்குடி, காரைக்குடி வடக்கு, காரைக்குடி வடக்கு குற்றப்பிரிவு, சாக்கோட்டை, குன்றக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்பாச்சேத்தி சரக்கத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் இன்று(நவ.23) அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையினை ராமநாதபுரம் சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டார்.
சிவகங்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம்- 2025 பணியின் மேற்பார்வையாளர் & புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனீஸ் சாப்ரா இன்று(நவ.23) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
Sorry, no posts matched your criteria.