India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், மாவட்ட குடும்பநல செயலகம் மூலம் இருவாரகால உலக நவீன வாசக்டமி (ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல முறை) தின விழாவை முன்னிட்டு, இன்று (நவ.28) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மானாமதுரையை சேர்ந்த அமிர்த ஆரோக்கிய செல்வி(43) பெண்கள் நல குழுவில் உறுப்பினராக உள்ளார். இவருடன் உறுப்பினராக உள்ள தீபிகா(26) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1,00,000 கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை திருப்பி கேட்ட போது நேற்று(நவ.27) தகராறில் ஈடுபட்டு தாக்கியதில் படுகாயமடைந்த அமிர்த ஆரோக்கிய செல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மானாமதுரை போலீசார் விசாரணை செய்கின்றனர்.
தமிழகத்தில் வருவாய்த்துறையில் காலியான 3,000 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மண்டல துணை தாசில்தார்களின் பட்டா மாறுதல் அதிகாரத்தை பறிக்க கூடாது. இதுபோன்ற 8 அம்ச கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் தீவிரமாகும் என சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.
காரைக்குடியை சேர்ந்த சிவானந்தம்(44). இவரது பேஸ்புக் பக்கத்தில் வாட்ஸ்அப் லிங்க் மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதை நம்பிய அவர் கடந்த ஜூலை-செப்டம்பர் வரை 5 தவணைகளில் ரூ.17 லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. இந்நிலையில், சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒளவையார் விருது – 2025 வழங்கப்பட உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடவடிக்கைகள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 31.12.2024 https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் (ITI) TATA தொழில் 4.0 மையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் (MSME Workers), பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் Customized Short term Courses நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று(நவ.27) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பீரவீன் உமேஷ் தலைமையில் நடைபெற்ற சீருடைப்பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் 15 ஆயுதப்படை காவலர்கள், 37 சிறப்புக் காவல்படை காவலர்கள், 17 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை காவலர்கள் ஆகிய மொத்தம் 69 காவல் துறை,சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு இன்று(நவ.27) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது
முத்துப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள TATA தொழில் 4.0 எனும் நவீன உயர் உற்பத்தி 3D Printing, Laser cutting, Internet of Things, Robotic CO2 Welding, Mechanic Electric vehicle, CNC Lathe Machining τ 23 நவீன Customized Short term Courses குறைந்த கட்டணத்தில் தொடங்கப்படவுள்ளது. வேலைதேடும் இளைஞர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(நவ.27) தெரிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகின்றது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
இன்று(நவ.27) நடைபெற இருந்த அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என-அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.