India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சில்லாம்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கவள்ளி (55). இவர் பசு மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார். இவரது வீட்டுக்கு வந்த குரங்குகள் மின் வயரை அறுத்துவிட்டன. அந்த வயர் அங்கு நின்று கொண்டிருந்த மாட்டின் மீது விழுந்தது. இதை பார்த்த மாணிக்கவள்ளி அந்த மின் வயரை தூக்கி எறிய முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளின் கீழ் உள்ள 1,357 ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகம், ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் கடந்த மாதம் நடைபெற்றது.நடத்தப்பட்ட வாக்காளர் சுருக்க திருத்த முகாம் மூலம் 32,453 பேர் மனு செய்துள்ளனர்.
தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் வருகின்ற 13.12.2024 அன்று மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், வருகின்ற 10.12.2024 க்குள் https://forms.gle/sMfkAEmnuufHCG1M9 இணையதள முகவரி மற்றும் yuvautsavsvgtn@gmail.com மின்னஞ்சல் முகவரியின் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது, சிவகங்கையில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.மன்னார்குடி-காரைக்குடி-காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். செங்கோட்டை- சென்னை ரயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு அரசு அலுவலகத்திலிருந்து 3 நாளுக்குள் ஒப்புகை வழங்க வேண்டும். புகார் மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் 1 மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு மனு பெற்றதிலிருந்து ஒரு மாதத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டுமென்று மாவட்ட தலமைச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள். அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான தொழில் மற்றும் பிற தொழிற்சாலைகளில்வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2024-2025 ஆண்டுக்கான நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடுவதற்கும் 2025 பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் சிவகங்கையை சேர்ந்த நாட்டுப்புற கலைக்குழுக்கள் கலந்து கொள்ளலாம்.ஆர்வமுள்ளவர்கள் www. artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்புவனம் ஒன்றியத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 40 க்கும் மேற்பட்ட சமுதாய கிணறுகள் தோண்டப்பட்டன. இதில் ஒரு கிணறு மூலம் 20 முதல் 30 ஏக்கர் பாசன வசதி பெற்றனர். காலப்போக்கில் விவசாயிகள் குழுக்கள் அமைக்காமல் விட்டதால் இருபதுக்கும் மேற்பட்ட கிணறுகளை சிலர் ஆக்கிரமித்தனர். அவற்றை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்து உள்ளதால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது.இந்நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தோர் 2024 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-245008 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க டிசம்பர் 20ஆம் தேதி கடைசிநாள் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.