India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சிவகங்கையில் டிச.14 அன்று காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயரினை https;//sivaganga.nic.in என்ற தரவுத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சாலூர் கிராமத்தில், டிச.11, காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் அரசுத் துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பிரான்மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள அசரீரி விழுந்தான் மலைப்பகுதி உள்ளது இப்பகுதியில் 2005ம் ஆண்டு பெய்த கனமழையின் போது இங்குள்ள அசரீரி விழுந்தான் மலையில் மேலவண்ணாரிருப்பு அருகே 1000 அடி உயரத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு அடிவாரம் வரை பெரிய பள்ளம் உருவானது.நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மலைகளை ஆய்வு செய்து கூடுதல் மரக்கன்றுகளை நட இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், பாராளுமன்ற கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று மாவட்ட படைவீரர் நலத்துறையின் மூலம் கொடிநாள் வசூலை துவக்கினர். தொடர்ந்து 33 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு ரூ.07.25 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அரசு பள்ளிக 10 வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜனவரி 25ம் தேதி நடைபெறும் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இதற்கு மாணவ, மாணவியர்கள் <
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இலவச மருத்துவ முகாமை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் இவர் மேற்கு வங்கம் மாநிலம் ஹௌராவிலிருந்து ஹௌரா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்துள்ளார்.அப்போது ரயில்வே போலீசார் பயணிகளிடம் நடத்திய திடீர் சோதனையில் ஆரோக்கியதாசிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.75 லட்ச பணத்தை கைப்பற்றிய போலீசார் பணத்தையும் ஆரோக்கியதாஸ் என்பவரையும் வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
தேவகோட்டை பெத்தாலாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயிலும் நிஷாந்தினி என்ற சிறுமி நேற்று தனது தந்தையுடன் இருசக்க வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது ராம்நகர் அருகே பணப்பைக் கிடப்பதை பார்த்து தன் தந்தையிடம் சொல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. தேவகோட்டை உட்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் கவுதம் சிறுமி நேரில் அழைத்து பாராட்டினார்
ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டு உள்ள கடலூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், நிவாரணப் பொருட்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கனரக வாகனங்கள் மூலம் இன்று அனுப்பி வைத்தார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி ஒன்றியம் வேங்கைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கழிப்பறை கட்டப்பட்ட இடம் தனியாருக்குச் சொந்தமானது என்று புகார் கூறப்பட்டதால், கட்டுமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் சில மீட்டர் தூரத்தில் உள்ள பழைய பள்ளிக் கட்டடத்தில் இயங்கும் பழுதடைந்த கழிப்பறைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அரசுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.