India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்தை தொடர்ந்து இணைத் தொழிலாக பண்ணைக் குட்டையில் மீன் வளர்த்தால் ஆறு மாதத்தில் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50லட்சம் வரை லாபம் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைத் துறை மற்றும் அதன் ஒருங்கிணைந்த துறைகள் மூலம் அரசு வழங்கும் மானிய திட்டம் குறித்து அறிந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரியநரிக்கோட்டையில் உள்ள சர்ச்சில் மகேஷ் என்பவர் ஊழியம் செய்து வந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகி விவாகரத்தான பெண் ஒருவருக்கும் மகேஷிற்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகி தற்போது அந்தப் பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் மகேஷ் அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் மகேஷ் கைது செய்து இன்று விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்படவுள்ள Group IV/VA0 தேர்வுக்கு 02.01.2025 முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடத்தப்பட உள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணாக்கர்கள் பங்கேற்கலாம். மேலும் https://tinyurl.com/tnpscgroup4coachingsvg என்ற google from-ல் தங்கள் சுய விபரங்களை பூர்த்தி செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 21.01.2025 மற்றும் 22.01.2025 ஆகிய தேதிகளில் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (டிச.28) தெரிவித்துள்ளார்.
ஜனவரி 21மற்றும் 22-ந்தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் பல்வேறு இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் வருகை தந்து நிறைவு பெற்ற பல்வேறு பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சருக்கு மாநகராட்சி சார்பில் உற்சாக வரவேற்பு வழங்க வேண்டும் மேயர் கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டாக மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 87,828 உறுப்பினா்களுக்கு ரூ.530.15 கோடி மதிப்பீட்டில் பயிா்க் கடனுதவி, 33,904 உறுப்பினா்களுக்கு ரூ.178.63 கோடி மதிப்பீட்டில் கால்நடைப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டது. இதில், நிகழ் நிதியாண்டில் மட்டும் ரூ.1,388 கோடி மதிப்பில் மொத்தம் 34 வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தகவல்
வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவர்களின் வசதிக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒவ்வொரு தாலுகா வாரியாக சுழற்சி முறையில் ஆதார் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் மையம் வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் தகவல்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பம்பு செட்டுகளை வீட்டில் இருந்தபடியே இயக்குவதற்கான கருவி, புதிய மின் மோட்டார் பம்பு செட்டு மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், தேவகோட்டை, சிங்கம்புணரி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் 9080230845, 9442225856 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து எவ்வித வேலையும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுகிறது. கல்வி தகுதிகேற்ப் மாதம் ரூ.200 முதல் ரூ.600 வரை 3 ஆண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்று கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
வண்டி எண்: 20895 இராமேஸ்வரம்-புவனேஸ்வர் 2025 ஜனவரி-1 முதல் இனி மானாமதுரை சந்திப்பு நிலையத்தில் காலை 11:08 மணியளவில் வந்தடையும், இரண்டு நிமிடங்களுக்கு பிறகு 11:10 மணியளவில் மானாமதுரையில் இருந்து புறப்படும். பின்னர் சிவகங்கைக்கு காலை 11:33 மணிக்கு வந்த பிறகு 11:35 புறப்படும் இந்த நடைமுறை ஜனவரியில் இருந்து அமுலாகும் என இரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.