India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் எதிரே உள்ள காட்டு பகுதியில் 40 வயது மதிக்கதக்க அடையளாளம் தெரியாத பெண் ஒருவர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் உடல் அழுகி இறந்த நிலையில் இருந்தார். நேற்று அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி டாக்டரை வர வழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பெண் யார் அங்கு வந்து எப்படி இறந்தார் என விசாரிகின்றனர்.
சிவகங்கை மாவட்ட பொது விநியோகத்திட்டத்தில் வருகின்ற (08.03.2025) காலை 10.00 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகலட்டை கோரியும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தகுதியான நபர்கள், மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சிக்கு <
சிவகங்கை, திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆதி குருபகவானாக சிவபெருமான் அருள்கிறார். இங்கு சென்று வழிபட்டால் குருவருள் கைகூடும். இதுவரை நாம் பட்ட கஷ்டமெல்லாம் நீங்கி நன்மைகள் பெருகும்.குழந்தை வரம் வேண்டுவோர் மஞ்சள் துணியாலான தொட்டில் பொம்மை எடுத்து வந்து, ஆலமரத்தின் விழுதுகளில் கட்டிவிட்டு 108 முறை வலம் வந்து வழிபட்டால் வேண்டுதல் தட்டாமல் நிறைவேறும்
சிவகங்கை மாவட்டத்தில் 2017 – 2023 வரை அரசால் வழங்கப்பட்ட உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. விசாரணையில் ரூ.9 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பதும், அதில் ரூ.5 லட்சம் திரும்பப் பெறப்பட்டதும் தெரியவந்தது. .இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரி இளையான்குடியை சேர்ந்த ராமன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை கேந்திரிய வித்யாலயாவில் Any Degree, B.Ed, B.Sc, BA, Diploma, M.Sc, MA, PG Diploma படித்தவர்கள் PGT, TGT, DEO, Computer Instructor பணிக்கு நேரடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் 21மற்றும் 22-ஆம் தேதி நேர்காணல்நடைபெற இருக்கிறது. தகுதியான நபர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்கும்.விண்ணப்பிக்க <
சிவகங்கை மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற 19.03.2025 அன்று திருப்பத்தூர் வட்டத்தில் நடைபெற இருக்கிறது. வரும் 11.03.2025 முதல் 17.03.2025 வரை திருப்பத்தூர் வட்டத்திற்குட்பபட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் மொத்தமாக 17 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் சிவகங்கை. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04-03-2025. B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, PhD படித்த நபர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.42,000 வரை சம்பளம் கிடைக்கும். <
தமிழகம் முழுவதும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு சிறப்பாக தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொது தேர்வினை மொத்தம் 16,063 மாணவ, மாணவியர்கள் எழுதும் நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 7,157 மாணவர்கள், 8,737 மாணவிகளும் என மொத்தம் 15,894 மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்து தேர்வு எழுதியுள்ளனர். மேலும் 164 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத வருகை புரியவில்லை.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன.சிவகங்கை மாவட்டத்திற்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <
Sorry, no posts matched your criteria.