Sivagangai

News January 29, 2025

காரைக்குடியில் 10 வீடுகளில் திருடிய இருவர் கைது

image

காரைக்குடி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முத்துமணிகண்டன் (27), சுதன்குமார் (19)  போலீஸாரை பார்த்ததும் தப்பியோடினர். போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்து விசாரித்ததில் காரைக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, குன்றக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10 வீடுகளில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. போலீசார் அவர்களௌ கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2025

கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு அடுத்தாண்டு நடைபெற வாய்ப்பு

image

 கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 2024 ஜூன் தொடங்கி 2025 ஏப்ரல் வரை நடைபெறும் என தமிழக தொல்லியல் துறை அறிவித்தது. ஏப்ரல் வரை 10ம் கட்ட அகழாய்வு நடைபெற உள்ளதால் அதன்பின் கண்டறிந்த பொருட்களை ஆவணப்படுத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும் பணி நடைபெற சில மாதங்கள் ஆகும். பின் விண்ணப்பித்து 11ம் கட்ட அகழாய்விற்கு அனுமதி டிசம்பரில் தான் கிடைக்கும். எனவே 11ம் கட்ட அகழாய்வு அடுத்தாண்டு(2026) ல் நடைபெறும்.

News January 28, 2025

திருப்புவனம் காவல் நிலையம் எதிரே பைக் திருட்டு

image

திருப்புவனம் காவல் நிலையம் எதிர்புறம் பங்களா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். மார்க்கெட்டிங்கில் பணி புரியும் இவர் தனது இருசக்கர வாகனத்தை (TN.63.JC.5683) ஜன.26ஆம் தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் பார்த்தபோது காணவில்லை. அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருப்புவனம் காவல்துறை விரைந்து விசாரித்து வருகிறது.

News January 28, 2025

பேராசிரியர்கள் கல்லூரி முன்பு போராட்டம்

image

பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் ரூபாய் 57,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முனைவர் ரமேஷ் தலைமையில் இன்று (ஜன.28) வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் அவசியம் குறித்து முனைவர் பரமானந்தம் விளக்கவுரை ஆற்றினார். இதில் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

News January 28, 2025

முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினரின் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் /இராணுவப் பணியின்போது உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் வருகின்ற 05.02.2025 தேதிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

விடுமுறை அளிக்காத 238 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 238 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க மதுரை கூடுதல் கமிஷனர் உமாதேவி பரிந்துரைத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 94 நிறுவனங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 59 நிறுவனங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 35 நிறுவனங்களும், ராமநாதபுரத்தில் 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.உங்க நிறுவனத்தில் லீவ் விடப்பட்டது என்பதை கமெண்ட் பண்ணுங்க

News January 28, 2025

அரசு பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் 

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பத்தரசன்கோட்டையை சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா வயது 14. காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மின்சாரம் தாக்கி ஜன. 24 அன்று உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலியானதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கியதால் ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர்.

News January 27, 2025

அமைச்சர் ராஜகண்ணப்பன் வழக்கு – நீதிமன்றம் மறுப்பு

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ராஜ கண்ணப்பன் பிரசாரம் செய்தார். தேர்தல் விதிகளை மீறி, 15 வாகனங்களில் பிரசாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க நீதி மன்றம் மறுத்துள்ளது.

News January 27, 2025

பஸ் பின்னால் பாறாங்கல்லுடன் சென்ற நடத்துனர்

image

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி வண்ணாரிருப்பு மலைப் பாதையில் நேற்று அரசு பேருந்து ஏறிய போது டிரைவர் பிரேக் அடித்தும் நிற்காமல் சென்றதால் பின்புறம் வருவதை அறிந்த நடத்துனர் பயணிகளை காப்பாற்றுவதற்காக பேருந்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த பாறாங்கல்லை எடுத்துக்கொண்டு முட்டுக்கொடுப்பதற்காக பேருந்து பின்புறம் நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

News January 27, 2025

மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

image

சிவகங்கை பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா (20). கல்லூரி மாணவரான இவா், கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்தாா். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் அந்த மாணவி கா்ப்பமானாா். இதுகுறித்து மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆதித்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!