India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

பூவந்தி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது மதுரையில் இருந்து வேகமாக வந்த கார் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி பேருந்திற்காக காத்திருந்த கூட்டத்தில் புகுந்தது. இதில் ஸ்ருதிகா, தமிழரசி, ரஞ்சிதம், சுதாகர், கோபிகா, அதிவீரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

உரத்துப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயனுக்கும், அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளையம்மாள் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

உரத்துப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயனுக்கும், அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளையம்மாள் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி தொகுதியில் S. மாங்குடி போட்டியிடவுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் NDA கூட்டணி சார்பில் போட்டியிடுபவர்களின் விவரம் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் K.C திருமாறன் மற்றும் மானாமதுரை (தனி) தொகுதியில் V.பாலகணபதி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

பரமக்குடி அருகே கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் நீலாவதி. இவர் காரைக்குடி செல்லும் தனியார் பேருந்தில் காளையார்கோவில் சென்றுள்ளார். அதிகரை விலக்கு அருகே கழுத்தில் இருந்த செயினை யாரோ இழுப்பது போல் உணர்ந்த நிலையில் செயினை கழற்றி பர்சில் வைத்துள்ளார். பின்னர் இறங்கி பர்சை பார்த்த போது பர்சில் இருந்த 5 அரை பவுன் தங்க செயின் மாயமானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.