India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் மொத்தமாக 17 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் சிவகங்கை. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04-03-2025. B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, PhD படித்த நபர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.42,000 வரை சம்பளம் கிடைக்கும். <
தமிழகம் முழுவதும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு சிறப்பாக தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொது தேர்வினை மொத்தம் 16,063 மாணவ, மாணவியர்கள் எழுதும் நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 7,157 மாணவர்கள், 8,737 மாணவிகளும் என மொத்தம் 15,894 மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்து தேர்வு எழுதியுள்ளனர். மேலும் 164 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத வருகை புரியவில்லை.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன.சிவகங்கை மாவட்டத்திற்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <
TNPSC, Group 4, VAO பணிக்கான போட்டி தேர்வு 2025 ஜூலை 13ஆம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக சென்று பெயரினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் இந்த அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட அலுவலர், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.ஆண், ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட குடிநீர், டேபிள் வசதியுடன் கூடிய ‘பொதுவான அறை’ இல்லை. ஊழியர்கள் பொதுமக்கள் செல்லும் நடைபாதையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி செட்டி நாட்டு விமான ஓடுதளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உதான் திட்ட சிறப்பு அதிகாரி ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., சக்தி மணி, எஸ்.வி.பி., ஏர்போர்ட் சந்திரமவுலி, சீனிவாசன், காரைக்குடி தாசில்தார் ராஜா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 83 தேர்வு மையங்களில், ஆண்கள் 7234 பேர், பெண்கள் 8829 பேர் உட்பட மொத்தம் 16,633 பேர் எழுதுகின்றனர். 174 மாணவ, மாணவிகள் தனித்தேர்வர்களாகவும், தேர்வு கண்காணிப்பில் 83 முதன்மை கண்காணிப்பாளர்கள், 83துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள், 10க்கும் மேற்பட்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் 2013 ல் தான் வாங்கிய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய காரையூர் விஏஓ ராஜாவை (49) அணுகினார். அதற்கு ராஜா ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி செந்தில் முரளி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் 2013 ல் தான் வாங்கிய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய காரையூர் விஏஓ ராஜாவை (49) அணுகினார். அதற்கு ராஜா ரூ.5,000 லஞ்சம் கேட்டார். இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி செந்தில் முரளி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.