Sivagangai

News February 19, 2025

நூலகங்களுக்கான விருது – விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்ட தனி நபர் இல்லங்களில் சிறப்பாக பராமரிக்கப்படும் நூலகத்திற்கு சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது. உரிய விபரங்களுடன் வருகின்ற பிப்.25 ஆம் தேதிக்குள் dlosivagangai01@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், 133-D மஜீத்ரோடு சிவகங்கை-630561 என்ற முகவரியில் விண்ணப்பித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

காளையார்கோவில் என பெயர் வரக் காரணம் தெரியுமா?

image

சுந்தரர் ஒரு முறை காளையார்கோவில் எல்லைக்குள் வந்தவுடன் கோவிலுக்கு செல்லும் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் நடக்க தயங்கிய சுந்தரர் மனம் வருந்திப் பாடினார். அப்போது சிவபெருமான் ஒரு காளையை அனுப்பி காளை கால் பதித்த இடங்களில் லிங்கம் இல்லை என அசரீரி ஒலிக்க சுந்தரர் அவ்வழியில் சென்று தரிசனம் செய்தார். காளை வழிகாட்டிய தலம் என்பதால் காளையார்கோவில் என பெயர் பெற்றது. Share It.

News February 18, 2025

52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி

image

தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்த அலெக்சாண்டர் கல்வி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி +2 மாணவர்களை குறைந்த கட்டணத்தில் இஞ்ஜினியர் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.10000 வரை பெற்று சில மானவர்களின் அசல் சான்றிதழைகொடுக்காமால் தலைமறைவாகியுள்ளார்.இதுகுறித்து அளித்த புகாரின் படி அலெக்சாண்டரை கைது செய்து விசாரித்ததில் அவர் 52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

News February 18, 2025

7 பேரை கடித்துக்குதறிய தெரு நாய் 

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தில் 13 வயது பள்ளி சிறுமி மற்றும் அதே அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்ற மூதாட்டி உட்பட 7 பேரை அப்பகுதியில் சுற்றித்திருந்த தெருநாய் ஒன்று விரட்டி கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி சிவகங்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 17, 2025

சிவகங்கை இளைஞர்களுக்கு ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை நாட்களில் அனைத்து கல்வி சான்றுகள், வேலை வாய்ப்பு, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 17, 2025

குறைதீர் கூட்டத்தில் 429 மனுக்கள் பெறப்பட்டன

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (பிப்.17) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர், மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 429 மனுக்கள் பெறப்பட்டன.

News February 17, 2025

திரிபுரா ஆளுநரை வரவேற்ற சிவகங்கை துணை ஆட்சியர்

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்த திரிபுரா ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லுவை தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் இன்று (பிப்.17) அரசு சார்பில் வரவேற்றார். உடன் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

News February 17, 2025

மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை

image

மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் ஐயாசாமி (19) என்பவரை அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ஐயாசாமியை வெட்டியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை ரூ.62500 வழங்கினர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது

image

சாத்தரசன் கோட்டையில் இருந்து கொன்னக்குளம் பகுதியில் உள்ள மாங்குளத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக சூரக்குளம் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் சரத்குமார் (30), காத்தலிங்கம் (31), கருணாமூர்த்தி ஆகிய மூவரும் 80 மூட்டைகளில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!