Sivagangai

News June 17, 2024

பஞ்சமுத்து சுவாமிகள் திருவீதி உலா

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பெரியநாயகி சமேத செரணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆணி தேரோட்ட திருவிழா ஜூன்-16 ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது இன்று நான்காம் திருநாளை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை செய்து திருவீதி உலா நடைபெற்றது.

News June 16, 2024

ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை  மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட்., கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து  நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு , தகுதியுடைய மாணவர்கள்  வரும் ஜூலை.8ஆம் தேதிக்குள் www.boat-srp.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

விவசாயிகளுக்கு ஆட்சியர் அளித்த தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் மண்வளத்தை அதிகரிக்க  கோடை காலத்தில், விவசாய பெருமக்கள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால், பருவ காலத்தில் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் அதிக விளைச்சலைப் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 16, 2024

கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்.

image

சிவகங்கை மாவட்டம், பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பெரிய மாடுப் பிரிவில் 15 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. இந்தப் போட்டியில், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகளும் சாரதிகளும் பங்கேற்றனா்.

News June 15, 2024

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் ”மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்” மாநில திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மொத்தம் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய இனங்களில் மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, பயன்பெறுவதற்கு தங்களது பகுதிகளுக்குட்பட்ட வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் ”மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
மாநில திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், மொத்தம் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய இனங்களில் மானியம் வழங்கப்படவுள்ளது எனவே, விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, பயன்பெறுவதற்கு தங்களது பகுதிகளுக்குட்பட்ட வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வு – ஆட்சியர் தகவல்

image

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு ஜூன் 7 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் https://agnipathvayu.cdac.in  என்ற இணையதளம் மூலம்  
ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு, 18.10.2024 முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

News June 14, 2024

சிறையில் இருந்து தப்பியோடிய கைதி கைது

image

விருதுநகரைச் சேர்ந்த கோபால் (29) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவரை கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றி உள்ளனர். இந்தநிலையில், சிறையில் இருந்த கோபால் நேற்று தப்பி  ஓடியுள்ளார். தப்பியோடிய கோபாலை போலீசார் இன்று (ஜூன் 14) கண்டுபிடித்து கைது செய்தனர்.

News June 14, 2024

சிவகங்கை: சிறையில் இருந்து தப்பியோடிய கைதி கைது

image

விருதுநகரைச் சேர்ந்த கோபால் (29) என்பவர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவரை கடந்த மாதம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றி உள்ளனர். இந்தநிலையில், சிறையில் இருந்த கோபால் நேற்று தப்பி  ஓடியுள்ளார். தப்பியோடிய கோபாலை போலீசார் இன்று (ஜூன் 14) கண்டுபிடித்து கைது செய்தனர்.

News June 14, 2024

சிறுபான்மையின மக்களுக்கு லோன் மேளா -ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் சிறுபான்மையினர்கள் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக, ஜூன் 26-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி  வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லோன் மேளாக்கள் நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுள்ள சிறுபான்மையினர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!