India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேசன்களில் கிரேடு 2 முதல் தலைமை காவலர் வரை உள்ள போலீசாருக்கு வழங்க வேண்டிய பயண உணவுப்படி, கூடுதல் பணி நாள் சம்பளம் ஆகியன பல மாதங்களாக வழங்கபடவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனை சிவகங்கை எஸ்பி காலதாமதமின்றி கிரேடு 2 முதல் தலைமை காவலர்கள் வரை கிடைக்க வேண்டிய படியை வழங்க வேண்டும் என போலீசார் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.
சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் (41), தனியார் கல்லூரி உடற்கல்வி பயிற்றுநர். இவரிடம்,பிரான்மலையைச் சேர்ந்த சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கடந்த ஆண்டு பெற்றுள்ளனர். ஆனால், இது வரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகாரில், நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அ.காளாப்பூர், சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி அருகே அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், பிரான்மலை, காஞ்சிரங்கால், வாணியங்குடி, வந்தவாசி, வேங்கைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பராமரிப்புபணி முடியும் வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின பெருவிழா இன்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் செ.சத்தியன் தலைமை வகித்தார். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் 78 என்ற வடிவத்தில் பள்ளி மாணவர்கள் நின்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.
தமிழகத்தில் காரைக்குடி உள்ளிட்ட 4 புதிய மாநகராட்சிகள் சமீபத்தில் உதயமாகின. இதற்கான ஆணைகளை சம்பந்தப்பட்ட மேயர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆக.12 இல் வழங்கினார். காரைக்குடி நகராட்சியுடன் கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகள், சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய 5 கிராம ஊராட்சிகள் காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வரும் ஆக. 16 அன்று திருப்புவனம் வட்டாரத்திற்குட்பட்ட 12 கிராமங்களுக்கு கீழடி, பசியாபுரம், மதுரன் திருமண மண்டபத்திலும், கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்கு கோவிலூர், ஆண்டவர் திருமண மண்டபத்திலும், காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்கு கொல்லங்குடி, கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளதாக ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
சுய உதவி குழு உறுப்பினர்கள்(மற்றும்) இவர்களின் குடும்பங்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், பெண் தொழில் முனைவோர் ஆகியோர் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் மானியத்துடன் வழங்கப்படும் கடன் உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். விவரங்களூக்கு காளையார்கோவில் 8754080921, தேவகோட்டை 9786698846, மானாமதுரை 9092262696 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் உள்ள 445 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.