Sivagangai

News July 22, 2024

சிவகங்கை:கடனுதவி ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில், PM-AJAY- Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojana திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு வகையான கடனுதவி மானியத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

News July 22, 2024

50 நாளாக மருத்துவமனையில் நோயாளி அவதி?

image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அஸ்கர் அலி(28) என்பவர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் உலோகத் தகடு இல்லை எனக்கூறி இதுவரை சிகிச்சை செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 50 நாளாக மருத்துவமனையிலேயே அஸ்கர் சிரமப்பட்டு வரும் நிலையில், கல்லூரி டீன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

News July 22, 2024

சிவகங்கை எம்.பி.யை சந்தித்த இன்சூரன்ஸ் ஊழியர்கள்

image

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்சூரன்ஸ் பிரீமிய சேமிப்புக்கு பிரத்யேகமாக வரி சலுகை வழங்கிடவும் சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரத்தை காரைக்குடியில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நேற்று சந்தித்து மனு அளித்துள்ளனர். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கென குரலெழுப்ப வேண்டுமென மதுரை கோட்ட சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

News July 22, 2024

ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம்

image

சிவகங்கை வாரச்சந்தை கட்டுமான பணியை ஒப்பந்த தேதிக்குள் முடிக்காததால் ஒப்பந்ததாரருக்கு தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி கமிஷனர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-23ம் ஆண்டு நகர் புற மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டுமான பணி நடந்து வருகிறது. ஒப்பந்ததாரர் இப்பணியை ஏப்., மாதத்திற்குள் முடிக்கவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News July 21, 2024

”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்; ஆட்சியர் தகவல்

image

வருகின்ற 23.07.2024 அன்று ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட தி.புதுக்கோட்டை, மேலநெட்டூர், மேலப்பிடாவூர், கீழப்பிடாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு M.S.P.A உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள கோட்டையிருப்பு, திருவுடையார்பட்டி, காரையூர், நெடுமரம்உள்ளிட்ட பகுதிகளுக்கு மணமேல்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெறும் என சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு

News July 21, 2024

செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

image

சிவகங்கையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடந்ததை விட தற்போது கொலைகள் குறைவாகவே உள்ளது என பேட்டியளித்தார். இந்நிகழ்வில் எம்பி கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்பி பா சிதம்பரம், காங்கிரஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News July 20, 2024

சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மேம்பட்ட CNC மெஷினிங் டெக்னீசியன், வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர், மெக்கானிக் எலக்ட்ரானிக் வாகனம், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுனர், பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள் போன்ற தொழிற்பிரிவுகளில் சில காலியிடங்கள் உள்ளன. நேரடி சேர்க்கை ஜூலை 31வரை நடைபெற உள்ளது என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

சிவகங்கை ஆட்சியர் முக்கிய தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வனாமி இறால் வளர்ப்பு செய்யும் பண்ணைகள், பதிவு வேண்டியும், விண்ணப்பிக்காமலும், உரிய உரிமம் இல்லாமலும் இயக்கத்தில் இருப்பின், மாவட்ட அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளின்படி அதனை நிறுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 20, 2024

கூட்டுறவு பட்டயம் பயிற்சி தேதி நீட்டிப்பு

image

சிவகங்கையில் 10, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டய பயிற்சியில் சேரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ரூ.100 செலுத்தி ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை மேலாண்மை நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!