Sivagangai

News January 17, 2026

சிவகங்கை: காளை முட்டி 30 பேர் காயம்!

image

சிங்கம்புணரி பெரியகடை வீதியில் உள்ள சீரணி அரங்கத்தில், தை மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து முட்டித் தள்ளியதில், 30 பேர் காயமடைந்தனர்.

News January 16, 2026

சிவகங்கை: கேஸ் சிலிண்டரை போனிலேயே புக் செய்யலாம்..

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கியாஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க

News January 16, 2026

சிவகங்கை: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

image

சிவகங்கை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.

News January 16, 2026

சிவகங்கை: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 16, 2026

சிவகங்கை மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் eservices.tn.gov.in என்ற தளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க.

News January 16, 2026

சிவகங்கை மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் eservices.tn.gov.in என்ற தளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க.

News January 16, 2026

சிவகங்கை மக்களே.. இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் eservices.tn.gov.in என்ற தளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க.

News January 16, 2026

சிவகங்கையில் பொங்கல் கொண்டாடிய பிரபல நடிகை

image

சிவகங்கையில், முன்னாள் நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான நடிகை கௌதமி நேற்று  பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடினார். இதில் சிவகங்கையில் உள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் நினைவிடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

News January 16, 2026

சிவகங்கை: கஞ்சா வைத்திருந்ததாக இருவர் கைது

image

பூவந்தி காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் ஸ்ரீதர், கே. பெத்தானேந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையை சேர்ந்த அரவிந்தன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆதீஸ்வரன் ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பிறகு அவர்களிடமிருந்து இருசக்கர வாகனமும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

News January 16, 2026

சிவகங்கை: வெள்ளியில் தயரான பொங்கல் பானை

image

தேவகோட்டையில் முருகானந்தம் என்பவர் தங்க நகை, வெள்ளி பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வெள்ளி மூலம் சிறிய அளவிலான கலை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அவரது மகளுக்கு பரிசளிக்கும் நோக்கில் 12 கிராம் வெள்ளியில் பொங்கல் பானை, கரண்டி, கரும்பு, விறகுகள் தயாரித்து வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!