Sivagangai

News July 25, 2024

தொடர் விபத்து – மக்கள் அச்சம்

image

இன்று காலை 7:30 மணி அளவில் பூவந்தியிலிருந்து வந்த அரசு பேருந்தும் திருப்புவனத்திலிருந்து சென்ற இருசக்கர வாகனமும் மடப்புரம் வளைவு அருகில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டியவர் படுகாயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வளைவில், கடந்த 6 மாதத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News July 25, 2024

அதிகாலையில் ஆட்சியர் அதிரடி ஆய்வு

image

காளையார்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை பால் கொள்முதல் நிலையம், அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்களின் குறைகளையும், மாணவர்களுடன் அமர்ந்து உணவும் அருந்தினார்.

News July 25, 2024

கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் காளையார் கோவில் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. தனியார் மஹாலில் நடந்த நிகழ்வில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.

News July 24, 2024

கீழடியில் மேலும் ஒரு கண்டுபிடிப்பு

image

திருப்புவனம் அருகே கீழடியில் பத்தாம் கட்ட அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 குழிகள் தோண்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை மூன்று குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன. ஏற்கனவே, கண்ணாடி மணிகள், உடைந்த செம்பு பொருட்கள் மீன் உருவம் பொறித்த இரண்டு பானை ஓடுகள் தமிழ் எழுத்து கொண்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, மூங்கில் கொட்டகை காண நான்கு மணல் குடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

News July 24, 2024

கார் விபத்தில் சிக்கிய வில்லன் நடிகர்

image

ஜிகர்தண்டா படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் வில்லனாக அறிமுகம் ஆனவர் காளையன்.  இவரது சொந்த ஊர் வரிச்சியூர். நேற்று இரவு நடிகர் காளையன் தனியாக தனது காரில் வரிச்சூரில் இருந்து மதுரை சென்றார். அப்போது, கீழடி செக் போஸ்ட் அருகே திடீரென  கார் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காளையன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

News July 23, 2024

சிவகங்கை:சுய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், சுய தொழில் தொடங்கி பயன்பெறும் வகையில், படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ்(UYEGP) வியாபாரத் தொழில் செய்வதற்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.15 லட்சமாகும். www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஜூலை 23) தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

10 ஆண்டு அடைபட்டுக்கிடந்த குளத்திற்கு விடிவுகாலம்

image

சிவகங்கை-திருப்பத்தூர் ரோட்டில் உள்ள உடையார் சேர்வை ஊரணியினை சுத்தம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் மேற்பார்வையில் கடந்த 10 ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்த குளத்திற்கு வரும் நீர் வரத்து கால்வாயை சுத்தம் செய்யும் பணியினை இன்று ஆய்வு செய்தார்.

News July 23, 2024

ஆடிப்பட்ட நெல் விதைப்பிற்கு எருக்கஞ்செடிகள் சேகரிப்பு

image

காரைக்குடி-சாக்கோட்டை வட்டாரத்தில் ஆடிப்பட்ட நெல் விதைப்பிற்காக, முன் உரமான எருக்கஞ்செடிகளை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நாற்றங்கால் போடுவதற்கு முன்பு எருக்கஞ் செடிகளை போடும்போது அது இயற்கை உரமாகவும் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது. இயற்கை விவசாயிகள் பெருமளவில் இதனை பயன்படுத்துகின்றனர்.

News July 23, 2024

காரைக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

image

காரைக்குடி செக்மேட் சதுரங்க கழகம் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவில் 6வது ஆண்டு செஸ் போட்டிகள் அழகப்பா மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. 7 – முதல் 25 வயது வரை 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். அழகப்பசெட்டியார் கல்வி அறக்கட்டளை மேலாளர் காசி விஸ்வநாதன், அழகப்பா மெட்ரிக் பள்ளி முதல்வர் நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

News July 23, 2024

சிவகங்கையில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

image

அண்ணல் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே ஆகஸ்ட் 7 & 8 அன்று நடைபெறவுள்ளது. மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறும் என ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று(ஜூலை 23) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!