Sivagangai

News July 29, 2024

சிவகங்கையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

image

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 31ஆம் தேதி “மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்” நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசனூர், முடிகண்டம், கண்ணாரிருப்பு, மாத்தூர, படமாத்தூர், முக்குளம், பில்லூர், கோவனூர், ஆகிய கிராமங்களுக்கென அரசனூர் சமுதாயக் கூடத்தில் அன்று காலை 10- 3 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பன்பெறலாம். 

News July 29, 2024

திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்

image

சிவகங்கை அடுத்த சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக ஓன்றிய துணைச் செயலாளரான இவர், கடந்த 26-ம் தேதி சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியை இவர் இருக்கையைத் தூக்கி தாக்க முயன்றுள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்பேரில், சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகனைத் தேடி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முருகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

News July 28, 2024

பாஜக நிர்வாகி கொலை – அண்ணாமலை இரங்கல்

image

வேலாங்குளம் பகுதியில் பாஜக கூட்டுறவு பிரிவின் மாவட்ட செயலாளர் செல்வகுமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

News July 28, 2024

மகராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு

image

தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவகங்கை மாவட்ட பாஜக துணை தலைவர் சுகனேஸ்வரி விஜயகுமார் அவரது இல்லத்தில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

News July 28, 2024

கீழடியில் சுடுமண் அணிகலன் கண்டெடுப்பு

image

கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள், மீன் உருவ பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அகழாய்வில் பண்டைய கால மக்கள் அணியும் அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி, 2.5 செ.மீ., விட்டமும் மேல் பகுதி 1.5 செ.மீ., விட்டமும் கொண்டதாக உள்ளது.

News July 28, 2024

பேருந்தில் 19 பவுன் நகை திருட்டு

image

மாரநாடு பகுதியை சேர்ந்தவர் ரக்சனா (26). கோயம்புத்தூரில் மொபைல் ஷாப் வைத்துள்ள நிலையில் தனது சொந்த ஊரில் இருந்து கோயம்புத்தூருக்கு கமுதியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவர் பையில் 19 பவுன் நகை எடுத்து சென்றுள்ளார். திடீரென பையை பார்த்தபோது நகை மாயமானது. இது குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 27, 2024

கார்த்தி சிதம்பரம் டெபாசிட் வாங்கி இருக்க முடியாது

image

நாடாளுமன்ற தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க இல்லை என்றால் கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இ.வி.கே.எஸ்.இளங்கோவன், தனியார் தொலைக்காட்சி பேட்டியில் திமுகவுடன் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு நேற்று பதில் அளித்தார்.

News July 27, 2024

சிவகங்கை அருகே கொலை; 4 பேர் கைது

image

சிவகங்கை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (46). நேற்று இரவு மர்ம நபர்கள் இவரை கொலை செய்தனர். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் இன்று சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்த இத்திராஜா (24), அவரது தம்பி தீனா (18) மற்றும் சிவகங்கை ராஜா சத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (26) காமராஜர் காலனியைச் சேர்ந்த கௌதம் ( 22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

News July 26, 2024

சிவகங்கையில் பயங்கரம்; இளைஞர் வெட்டி படுகொலை

image

சிவகங்கை நகராட்சி மரக்கடை வீதியில் செயல்படும் பெயிண்ட் கடை அருகே ராஜபாண்டி என்ற நபரை நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News July 26, 2024

இ.எஸ்.ஐசி குறைதீர் கூட்டம்

image

சிவகங்கையில் இ.எஸ்.ஐ.சி யின் கவிதா சமகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் குறைதீர் கூட்டம் ஜூலை.29 இல் சிவகங்கை இ.எஸ்.ஐ.சி கிளை அலுவலகத்தில் காலை.9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ.சி காப்பீட்டாளர்கள், பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்யலாம் என துணை மண்டல இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!