India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வானது முதன்மை மாவட்ட நீதிபதியின் வழிகாட்டுதலின் படி அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
சிவகங்கை நகர், தாலுகா மற்றும் காளையார்கோவில் காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த 45 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார்.
சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரங்கள் நிறைந்து காணப்படும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கையில் கள் அதிகளவில் இறக்கப்பட்டது. கள்ளச்சராய பலி & ‘TASMAC’ மதுவின் தாக்கத்தை காட்டிலும் ‘கள்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. மீண்டும் ‘கள்’ விற்பனைக்கு வருவது குறித்த உங்கள் கருத்து என்ன?
காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட செஞ்சை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்பாக திட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தனர். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் இன்று சுடுமண்ணாலான உருளைவடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு உறைகளுடன் காணப்படும் இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடர்ந்து வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட கள்ளங்குடி, காரை, நாகாடி, தளக்காவயல், திருமணவயல், இளங்குடி, சிறுவத்தி ஆகிய கிராமங்களுக்கென திருமணவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வரும் 31ஆம் தேதி காலை 10- 3 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பாஜக நிர்வாகி செல்வக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய வசந்த் என்வரை போலீஸார் சுட்டுப்பிடித்தனர். செல்வகுமாரை கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம கும்பல் அறிவாளால் தாக்கினர். இதில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், இன்று காவல்துறையினர் பிடிக்க முயன்ற போது அரிவாளால் தாக்கிய வசந்தை, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இன்று (29.07.2024) மாணாக்கர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பெரியகருப்பன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பெரிய கருப்பணன் மாணவர்களுக்கு, சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்வில் ஆஷா அஜித் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.