Sivagangai

News August 3, 2024

சிவகங்கையில் 7980 கற்போர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

image

சிவகங்கை மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 15 வயதுக்கு மேற்பட்டோர்களில் எழுத, படிக்க தெரியாதோருக்கு புதிய பாரத எழுத்தறிவு 2022 – 27 ஐந்தாண்டு கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் 12 வளமையங்களில் 10,366 பேர் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகளில் 918 மையங்களில் 918 தன்னார்வலர்கள் மூலம் பயிற்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் 12 ஒன்றியங்களில் 7980 பேர் கட்டறியப்பட்டுள்ளனர்.

News August 2, 2024

சிவகங்கை ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்

image

திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcp.org.in/eduins/login.aspx என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

காரைக்குடி மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், விலையில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டு புத்தகங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றுலா விருது வழங்கப்படுகிறது. இதில், “சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் https://www.tntourismawards.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 20.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்” என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

சிவகங்கை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 16.08.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

வாழை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வாழைக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் செப்.,16 தேதிக்குள் காப்பீடு செய்யலாம். மழை, வறட்சி, நோய் தாக்குதலால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,24,982 கிடைக்கும். இதற்கு பிரீமியம் தொகையாக ரூ.6,259-த்தை தேசிய வங்கி அல்லது இ-சேவை மையம் மூலமாக செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

40 வருட போராட்டம்.. புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு

image

திருப்புவனத்திற்கு பேருந்து நிலையம் இல்லாமல் பல வருடங்களாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று(ஆக.01) சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அமைச்சர் பெரிய கருப்பன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், பேரூராட்சி சேர்மன் சேங்கைமாறன் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் பேருந்து நிலையம் அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

News August 2, 2024

தோட்ட கலை திட்டத்தில் மானியம் வழங்க ரூ.375 கோடி

image

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு ரூ.374 கோடி ஒதுக்கியுள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவைகளுடன் ‘https://tnhorticulture.tn.gov.in/tnhortnet” இணையதளத்திலும், அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.

News August 1, 2024

சிவகங்கை நகருக்கு புதிய பேருந்து நிலையம்!

image

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தினமும் சுமார் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பயணிகளுக்கு இடவசதி இல்லாததால் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மதுரை புறவழிச்சாலையில் 4 ஏக்கர் நிலத்தில் 100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் ரூ.5 கோடி செலவில் தெப்பக்குளத்தை சீரமைக்க போவதாக நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.

News August 1, 2024

அரசு அடுக்குமாடி குடியிருப்புகள்; நாளை விண்ணப்பிக்கலாம்

image

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு மறு குடியமர்வு செய்யும் வகையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மானாமதுரை சமத்துவபுரம் அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுவதற்கு பயனாளிகள் விண்ணப்பிப்பதற்கான முகாம் நாளை(ஆக.02) மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

error: Content is protected !!