India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.12) நெல்லை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி வரும் 30ஆம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தில் வருகின்ற ஆக.14 தேதி மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் முதல்வரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் வந்து கலந்து கொள்வதால் பொதுமக்கள் தங்களுக்குள்ள குறைகள் சந்தேகங்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் செப்., அக்., மாதங்களில் நடைபெற உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் https:\\sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம்.
சிவகங்கை மாவட்டம் உடையனகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வினோத் கண்ணன் என்பவரை இன்று(ஆகஸ்ட் -8)திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான் புதூர் சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வினோத் கண்ணன் உயிரிழந்தார். முன்விரோதத்தால் பழிக்கு பழி கொலையா என்ற கோணத்தில் திருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டரமாணிக்கம் அருகே தெற்குபட்டி மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில், பட்டிமன்ற பேச்சாளர் தேவகோட்டை ராமநாதனுக்கு உலக தமிழ் பறவை என்னும் பட்டய விருதையும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் ஆன பொற்கிழியையும் பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை குருக்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் கல்வி நிறுவனங்கள், ஊர் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1.500-ம், அலுவலகத்தில் ஓர் அறையில் இருந்த ரூ.71,230 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆடித் திங்களில் வரும் பூரம் நாளில் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிங்கம்புணரியில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனடிப்படையில் வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மனுக்கு 20 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நாளை மறுநாள் (ஆக.9) சிங்கம்புணரி வட்டாரத்திற்குட்பட்ட 10 கிராமங்களுக்கு முறையூர் சமுதாயக்கூடத்திலும், தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கு சருகனி, லேவா திருமண மண்டபத்திலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.மணி வரை நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளாார்.
Sorry, no posts matched your criteria.