Sivagangai

News January 25, 2026

சிவகங்கை: சிறுவன் மீது வாகனம் மோதி விபத்து

image

கொந்தகை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது தவத்தரேந்தல் பகுதியை சேர்ந்த யோகேஷ் (24) என்பவர் ஓட்டிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் சிறுவன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 25, 2026

சிவகங்கை : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

சிவகங்கை மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 25, 2026

சிவகங்கை: இளைஞர் அடித்துக் கொலை; இருவர் கைது

image

சாத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சந்தோஷ்குமார் (29). இவரது நண்பர் சிறுவாச்சி குபேஸ், மாடக்கோட்டை காட்டுராஜா மற்றும் சிலர் சேர்ந்து கடகாம்பட்டி அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமாரை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் குபேஸ், காட்டுராஜா இருவரை போலீசார் கைது செய்தனர்.

News January 24, 2026

சிவகங்கை: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News January 24, 2026

சிவகங்கை: உங்க கிட்ட பட்டா இருக்கா.? ஒரு GOOD நியூஸ்

image

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04575 240516 அணுகலாம். SHARE பண்ணுங்க

News January 24, 2026

இளைஞரை அடித்து கொலை செய்த இருவர் கைது

image

சாத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சந்தோஷ்குமார் (29). இவரது நண்பர் சிறுவாச்சி குபேஸ், மாடக்கோட்டை காட்டுராஜா மற்றும் சிலர் சேர்ந்து கடகாம்பட்டி அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்குமாரை தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வழக்கில் குபேஸ், காட்டுராஜா இருவரை போலீசார் கைது செய்தனர்.

News January 24, 2026

சிவகங்கை: போஸ்ட் ஆபீஸில் தேர்வு இல்லாமல் வேலை!

image

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <>இங்கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 24, 2026

சிவகங்கை: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK

image

சிவகங்கை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News January 24, 2026

சிவகங்கை: கல்லூரி மாணவி உயிரிழப்பு – போலீசார் விசாரணை

image

சருகணி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் ஜோஷ் நிகிதா (19). இவர் காரைக்குடி அரசு சட்டக்கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்ட பின், வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

சிவகங்கை: பெண் தற்கொலை!

image

கல்லல் அருகே குருந்தபட்டு பகுதியை சேர்ந்த கருப்பையா – மல்லிகா (56) தம்பதியினர். இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த மல்லிகா ஜன. 22 அன்று அரளிவிதையை அரைத்து குடித்துள்ளார். அவரை மீட்டு செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கல்லல் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!