India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் அருகே ரெகுநாதபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன் (72). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் நோக்கோடு அசிங்கமாக பேசி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூக்கனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், நேற்று மூக்கனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் அருகே ரெகுநாதபட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கன்(72) அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடந்த 2017 மே 3ம் தேதி பாலியல் நோக்கோடு அசிங்கமாக பேசி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூக்கனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இன்று மூக்கனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
வருகின்ற 11ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆகியன குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அமைதியாக முறையில் நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பார்வையாளர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை & பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டி சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் இன்று கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 நிலையில் உள்ள 2,327 காலிபணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வினை சிவகங்கையில் செப்.14 அன்று 43 மையங்களில் 13,260 பேர் எழுத உள்ளனர். குரூப் 2 தேர்வினை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 13,260 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கென சிவகங்கையில் 22, காரைக்குடியில் 16, தேவகோட்டையில் 5 மையங்கள் என 43 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
2024-25ஆம் ஆண்டிற்கு, சிவகங்கை மாவட்ட அளவில்
பள்ளிகளில் 1 -12ஆம் வகுப்பு முடிய பயின்று வரும் மாணாக்கர்கள் திருக்குறள் முற்றோதலில் பங்குபெறுவதற்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆயத்த கூட்டம் சார்பில் செப் – 10 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார பகுதிகளில் உள்ள டிட்டோ ஜாக் நிர்வாகிகள் உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விளையாட்டுத் துறையில் சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்கள் ரூ.6,000 மாத ஓய்வூதியம் பெற தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரா்கள் வரும் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் கலைக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிணி அறிவியல் ஆகிய துறைகளில் முதுநிலை படிப்புகள் உள்ளன. 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ளது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழ்ப்பசலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பீரவின் என்ற இளைஞர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இதில் தொடர்புடைய சசிக்குமார், தனுஷ், அமர்நாத், ரகுபதி, சுதர்சன் ஆகிய 5 பேரை மானாமதுரை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் இன்று(செப்.04) கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.