Sivagangai

News August 12, 2024

மாநகராட்சியாக உதயமான காரைக்குடி

image

தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக.12) காணொலி வாயிலாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மாநகராட்சியாக சற்று முன் அறிவித்தார். மேலும், காரைக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார் .

News August 12, 2024

காரைக்குடியில் 11 பேர் கைது

image

காரைக்குடியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலியான நிலம் கற்பக விநாயகர் நகரில் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆள் மாறாட்டம் மூலம் பவர் பத்திரம் பதிவு செய்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி சார் பதிவாளர், போலீஸ் எஸ்ஐ உட்பட 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

News August 11, 2024

சிவகங்கை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழை

image

தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகி உள்ளதால், சிவகங்கை மாவட்டத்தில் ஆக:12,13,14 ஆகிய மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 11, 2024

நாகை துறைமுகத்தில் சிவகங்கை கப்பல்

image

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக நாகப்பட்டினம் விளங்கியது. காலப்போக்கில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது. நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதை முன்னிட்டு சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

News August 11, 2024

சிவகங்கை மாவட்டத்தின் மழை நிலவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில்
நேற்று பெய்த மழையின் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சிவகங்கையில் 32 மி.மீ, மானாமதுரையில் 57மி.மீ, திருப்புவனத்தில் 90. 40மி.மீ, திருப்பத்தூரில் 29. 40மி.மீ,  தேவகோட்டையி 2.40 மி.மீ, சிங்கம்புணரியில் 13.60 மிமீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 224.80 மி.மீ மழை நேற்று (ஆகஸ்ட்-10)பெய்துள்ளது.

News August 11, 2024

சிவகங்கைகாரரிடம் கைவரிசை காட்டிய 2 பேர் மீது குண்டாஸ்

image

காரைக்குடி சேர்ந்தவர் நகை வியாபாரி சரவணன். இவர் மே 21ஆம் தேதி சென்னையில் இருந்து 75 பவுன் நகைகள் & 7 கிலோ வெள்ளி பொருட்களை பேருந்தில் கொண்டு வந்தார். இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

News August 11, 2024

மைசூர் – காரைக்குடி சிறப்பு ரயில்

image

பயணிகளின் வசதிக்காக மைசூர்-காரைக்குடி சிறப்பு ரயில்(06295) மைசூரிலிருந்து ஆக. 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 9.30 மணிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து – மைசூர் சிறப்பு ரயில்(06296) காரைக்கு ஆக. 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக. 11) தொடங்குகிறது.

News August 11, 2024

சிவகங்கை ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்

image

சுதந்திர தினம் (15.08.2024) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

சிவகங்கை ஆதிதிராவிடர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயில்வதற்கு https://www.tahdco.com/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

சிவகங்கை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!