Sivagangai

News August 13, 2024

சிவகங்கை ஆட்சியர் வெளியிட்ட புது தகவல்

image

சிவகங்கை மாவட்டம் முழுவதும் புதுவயல், சிங்கம்புணரி, பள்ளத்தூர் வாரச்சந்தைகளில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-26, மேஜை தராசு-3, விட்டத்தராசு-15, இரும்பு எடைக்கற்கள் 44 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-16 என மொத்தம் 104 எடையளவுகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

News August 13, 2024

சிவகங்கை தொழில் முனைவோர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை, வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை, மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM)” வாயிலாக பெறலாம். மேலும், இச்சேவைகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 9047417828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

யார் இந்த தேவநாதன் யாதவ்?

image

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? வின் டிவியின் நிறுவனரான இவர் யாதவ மகா சபையின் தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவன தலைவராகவும் உள்ளார். பாஜக கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு திருவாடணை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 11,842 வாக்குகள் பெற்றார். 2024 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 1,95,788 ஓட்டுகள் பெற்றார்.

News August 13, 2024

திருவிழா ஊர்வலத்தில் விஷ வண்டு கடித்து 40 பேர் காயம்

image

சிவகங்கை மாவட்டம், சுந்தரநடப்பு கண்மாய் கரையில் அமைந்துள்ள அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவில் கிராம மக்கள் இன்று(ஆக.,13) தீச்சட்டி எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, கதண்டு வண்டு கடித்து 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 13, 2024

சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

image

சிவகங்கை சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக.,14) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை, லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 – மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். அதேபோல், தேவகோட்டை நகா், உதையாச்சி, எழுவன்கோட்டை, க.கோட்டை, வேப்பங்குளம், உஞ்சனை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 10 – 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

News August 13, 2024

கால்நடைகளுக்கு ஆக.30 வரை தோல் கழலை நோய் தடுப்பூசி

image

சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பசு மாடுகளுக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசியானது ஆக.30ம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், மேலும் நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படும்‌ என்று கூறினார்

News August 13, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரி, நகரக்குடி, அலிமதுரை, புலியூர், கோட்டையூர், வாணி, கீழைகுடி, தெற்கு கீரனூர், இளமனூர் உள்ளிட்ட 11 ஊராட்சி மன்றங்களுக்கு வடக்கு கோட்டையூர் புனித தோமையார் மஹாலில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு உரிய ஆவணங்களுடன் சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 12, 2024

சிவகங்கை: சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன்

image

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதகுபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகங்கை சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதில், அவரை சொந்த பிணையில் நீதிபதி விடுதலை செய்தார்.

News August 12, 2024

சிவகங்கை மாவட்ட குறைதீர் முகாம் நிலவரம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 400 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News August 12, 2024

கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு

image

தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் 495 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,191 கிலோ கஞ்சாவை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையிலான காவலர்கள் திருநெல்வேலி தகன எரிவாயு கூடத்தில் தீயிலிட்டு எரித்தனர்.

error: Content is protected !!