Sivagangai

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

News August 14, 2024

மதுபானக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

image

சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (ஆக.15) டாஸ்மாக் மதுபானகடைகள், அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உள்ளிட்ட மதுக்கூடங்களை மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானகடைகள் மற்றும் FL1, FL2/FL3/ FL3A/ FL3AA, உரிமம் பெற்ற கிளப் ஹோட்டல்கள், மது அருந்தும் கூடங்கள் நாளை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

சிவகங்கையில் நேற்று பெய்த மழையின் அளவு

image

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு இளையான்குடி மழை 13.00மி.மீ லேசான மழை, திருப்புவனம் 16.80 மி.மீ மிதமான மழை, காளையார் கோவில் 6.40 மி.மீ லேசான மழை, மொத்த மழையின் அளவு 36.20 மி.மீ சாரசரி மழை அளவு 4.02 மி.மீ லேசான மழை, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி போன்ற பகுதிகளின் மழை பதிவாகவில்லை.

News August 14, 2024

முதல்வர் குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து

image

சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் நேற்று(ஆக.13) காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும். அதற்குத்தான் காவிரி ஆணையம் உள்ளது. மேலும், தமிழக முதல்வர் யாருக்கு வேண்டுமானாலும் பதவி வழங்கலாம். யாரை வேண்டுமானாலும் அமைச்சரவையில் சேர்க்கலாம், நீக்கலாம் என்றார்.

News August 14, 2024

சிவகங்கையில் சார் பதிவாளர் பணியிடைநீக்கம்

image

சிவகங்கை கூட்டுறவுத்துறை சார்ந்த நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் மாவட்ட கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை கீழ் இயங்கும் நியாயவிலைக் கடையின் மொத்த விற்பனையாளர்களுக்கான 3 காலி பணியிடங்கள், போலி நியமன ஆணைகள் மூலம் நிரப்பப்பட்டது. இதுதொடர்பாக இணை பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சார்-பதிவாளர் சரவணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News August 13, 2024

சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட அனைத்து தாலுகா முழுவதிலும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக-15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷாஅஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!