Sivagangai

News August 25, 2024

ஆடு மேய்த மாணவன் நீட் தேர்வில் பாஸ்

image

சிவகங்கை கமலை கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் நாகராஜ் 17. மாற்றுத்திறனாளி இவர் பீர்க்கலைக்காடு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்தார். விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடுகளை மேய்ப்பார். ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சியளித்தனர்.முடிந்த நீட் தேர்வில் 720க்கு 136 மதிப்பெண் எடுத்து, மாற்றுத்திறனாளிக்கான 3% இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்

News August 24, 2024

10அடி விநாயகர் சிலை அசத்தும் மாற்றுத்திறனாளி

image

வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குயவர் தெருவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி பாண்டியராஜன் தனது ஒற்றை கையால் 3 அடி முதல் 10 அடி வரை உள்ள பெரிய விநாயகர் சிலைகளை தத்துருவமாக செய்து வருகிறார். இவர் செய்யும் சிலைகளை பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விரும்பி வாங்கி செல்வார்கள்.

News August 24, 2024

மாநிலத்தில் சிறந்த பள்ளி விருது

image

அரசு பள்ளியில் உயர் கல்விக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வியுடன் நீட், ஜெ.இஇ மற்றும் பிற உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரி பள்ளி வீதம் மாநில அளவில் 40 பள்ளிகள் செயல்படுகிறது. இதில் சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டன.இதில் இந்தாண்டுக்கான விருதை கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி பெற்றது.

News August 24, 2024

சிவகங்கையில் கண்ணாடி இல்லாமல் இயங்கும் அரசு பஸ்

image

சிவகங்கை மாவட்டம் கடைக்கோடி பகுதியான சாலைக்கிராத்திலிருந்து ஆர் .எஸ் மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், மானமதுரை, மதுரை, ஆனந்தூர், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் பஸ்களும், சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஒட்டை, உடைசலாக பின்பக்க கண்ணாடி இல்லாமல் இருப்பதாலும் பயணிகள் சிரமப்படுகின்றன.

News August 23, 2024

சிவகங்கை திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அறிக்கை

image

காரைக்குடியில் அமைந்துள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில், மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமையில், ஆக., 25 மாலை 5 மணிக்கு திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது . கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு(ம)பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகி அறிக்கை

image

சிவகங்கை மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு தலைவர் அங்குசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “கொல்லங்குடி கதிரேசன் செட்டியார் மஹாலில் நாளை மாலை 3 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் தலைமை தாங்குகிறார். இதில், பிரச்சார பிரிவின் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News August 23, 2024

சிவகங்கை எம்.பி தெரிவித்த விமர்சனம்

image

சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “விஜய் கட்சி கொடி ஏற்றினால் மட்டும் போதுமா? கொள்கை என்ன?; அரசை நடத்தி விடலாம்; அரசியல் கட்சிகளை நடத்துவது எளிதல்ல; கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களை விட தோல்வியடைந்தவர்களே அதிகம்; தமிழ்நாட்டில் அதிமுக தான் 2 வது பெரிய கட்சி, பாஜக அல்ல; காங்கிரஸ் 2ஆம் இடத்தை பிடிக்க கட்சியின் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும்”என கூறியுள்ளார்

News August 23, 2024

நடிகர் விஜய் பட்டு தெரிந்து கொள்வார்: கார்த்தி சிதம்பரம்

image

தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார். இது தொடர்பாக சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தனியாக கட்சி நடத்துவது சிரமமான காரியம் என்பது பட்டால்தான் விஜய்-க்கு தெரியும் என்றும், விஜய்யும் பட்டுத் தெரிந்து கொள்வார் என்றும் கூறினார்.

News August 23, 2024

மைசூரு – காரைக்குடி ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

image

மைசூரு – காரைக்குடி சிறப்பு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ததற்கு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காரைக்குடி வரை இயக்கப்பட்ட இந்த ரயிலானது தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.4 மற்றும் 7 ஆகிய நாட்கள் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மறுநாள் காலை 11:05க்கும் செங்கோட்டைக்கு மாலை 4:50க்கு சென்றடையும்.

News August 22, 2024

கருணைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களாக தேசிய தரவு தளத்தில் பதிவு பெற்று 31.03.2022-க்குள் விபத்தினால் உயிரிழந்திருந்தாலோ அல்லது ஊனமடைந்திருந்தாலோ, அமைப்புசாரா தொழிலாளர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை அணுகி கருணைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!