India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது; கடந்த ஓராண்டில் மட்டும் 28.40 கோடி பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்; 2023-ம் ஆண்டு சுற்றுலாக் கொள்கையின் படி 300 இடங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டன. வெளிநாட்டு பயணிகள் வருகையில் தமிழகம் 6ஆவது இடம்” என்று சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 25 இரவு அதிகாரிகள் விவரம்.
சேலத்தின் காவல் தெய்வமாக நம்பப்படும் அருள்மிகு வென்னங்குடி முனியப்பன் திருக்கோயில் தை மாதம் திருவிழா தொடங்க உள்ளது. வருகின்ற பிப்ரவரி 5ம்தேதி புதன்கிழமை பொங்கல் வைபவம் 6ம் தேதி வியாழக்கிழமை அலகு குத்துதல் வைபவம் நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்து கொண்டு வென்னங்குடி முனியப்பன் அருளைப் பெறுமாறு விழாக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மற்ற பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணி சண்டிகரை எதிர் கொண்டு ஆடி வருகிறது. இதில் முதலில் விளையடிய தமிழ்நாடு அணி 301 ரன்களுக்கும், சண்டிகர் 204 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸை விளையடிய தமிழ்நாடு அணி 305/5 டிக்ளேர் செய்தது. இதனால் சண்டிகர் அணிக்கு 406 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 25 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதியின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா-2025 சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளையதினம் 26/01/2025 சிறப்பாக நடைபெறவுள்ளது. இக்குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆ.ப. காலை 08.05 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கௌரவிக்க உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி ஆகியவற்றை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ’சகி பெண்கள் ஒருங்கிணைந்து சேவை மையம்’ செய்து வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427 2413213 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இதை தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்யூங்கள்.
சேலம் மாவட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டு தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கான மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும் இதற்கான கடைசி நாள் பிப்ரவரி மாதம் 28 என்றும் அதற்குள் சம்பந்தப்பட்ட தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.