Salem

News April 5, 2025

சேலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி!

image

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளாளக்குண்டம் கிராமத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. 45 அடி உயரம் கொண்ட அதிகார நந்தி சிலையின் வயிற்று பகுதியில் பக்தர்கள் சென்று தியானம் செய்ய தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார நந்திச் சிலையை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.

News April 4, 2025

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாறு

image

தென்னிந்நிய சினிமா வளர்ந்தது கோடம்பாக்கம் என்றாலும், அதனின் தொடக்கம் சேலம் தான். ஆம், சேலத்தை மையமாகக் கொண்ட ’மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தில் இந்தி, சிங்களம் உட்பட பல மொழிகளில் 150 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மலையாள சினிமாவின் முதல் பேசும் படத்தை தயாரித்த பெருமையும் இந்நிறுவனத்தையே சாரும். ஏற்காடு சாலையில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் தான் இந்திய சினிமா பரிணாமத்தின் நுழைவு வாயில்.

News April 4, 2025

டிக்கெட் இன்றி பயணம்: ரூ.22.14 கோடி அபராதம் வசூல்!

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 3.30 லட்சம் பயணிகளிடம் இருந்து ரூ.22.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 16% அதிகம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முறையாக டிக்கெட் எடுத்து உரிய வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

News April 4, 2025

சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

image

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

News April 4, 2025

சேலம் மாவட்டம் உருவான தினம்!

image

இன்று (ஏப்ரல் 04) சேலம் மாவட்டம் உருவான நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவான சேலம், இன்று 234-ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் எழில்மிகு ஏற்காடு, சேகோ ஜவ்வரிசி, சேலத்து மாம்பழம், கோட்டை மாரியம்மன் கோயில், கஞ்சமலை, சங்ககிரி கோட்டை, சேலம் வெண்பட்டு, உள்ளிட்டவை சேலம் மாவட்டத்தின் வரலாற்றை பறை சாற்றுகின்றன.

News April 4, 2025

தமிழில் பெயர் பலகை- ஆட்சியர் வேண்டுகோள்!

image

மே 15- க்குள் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம்.தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே,
சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள்,வணிக சங்கங்கள்,உணவு நிறுவனங்கள்,பள்ளி, கல்லூரிகள்,தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கிட ஆட்சியர் வேண்டுகோள்

News April 4, 2025

கோடைக்காலம் முடியும் வரை.. அதிகாரிகள் அறிவுறுத்தல்!

image

கோடைக் காலம் முடியும் வரை கால்நடைகளுக்கு தினமும் சோடா உப்புகளை கொடுக்க வேண்டும். கறவை மாட்டிற்கும் நாள் ஒன்றுக்கு, 70 லிட்டருக்கு மேல் தண்ணீர் தர வேண்டும். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்ச்சத்துக்கள் சேர்ப்பதன் மூலமும், வெப்ப அயற்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறை வினை தவிர்க்கலாம் என சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தெரிவித்தார்.

News April 4, 2025

சேலம் மாம்பழ வியாபாரிகளுக்கு எச்சரிக்கை!

image

எதிப்பான் ரசாயனம் தெளித்து மாம்பழங்கள், வாழைப்பழங்களை பழுக்க வைத்தால் வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், பழக்குடோன்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது மாம்பழங்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சோதனை செய்தும், பழ குடோன்களையும் கண்காணித்தும் வரப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த வியாபாரிகளுக்கு SHARE பண்ணுங்க!

News April 4, 2025

சேலத்தில் மாணவி தற்கொலை!

image

எடப்பாடி அருகே முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கடந்த 31ஆம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 3, 2025

தோல் வியாதி நீக்கும் சித்தேசுவரர் கோயில்

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோயில். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையைச் சுற்றி, பாதிக்கப்பட்ட தோல் பகுதியைச் சுற்றி கோயிலின் காந்த குளத்தில் போட்டால் தோல் வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!