India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம ஆத்தூர் அருகே நேரு நகர் பகுதியில் அண்ணன் சூர்யா (27) என்பவரை தம்பி சிவசுதன் (21) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்து சூர்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு. இச்சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் விசாரணை மேலும் ஆத்தூர் டி.எஸ்.பி.,அலுவலகம் பின்புறம் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் சார்பில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் செப்டம்பர் 15 முதல் 24 வரை சேலம்,நால்ரோட்டில் உள்ள சாமுண்டி காம்ப்ளக்ஸில் நடைபெற உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.இதன் மூலம் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மற்றும் நகை வியாபார நிறுவனங்களில் வேலை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94437 28438, 98941 96425 அழைக்கவும்!SHARE

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிக்கு நாளை (செப்.08) காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை இலவச மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ மாதிரி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த முழு மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 சேலத்தில் – இன்றைய முக்கிய நிகழ்வுகள்: ▶️காலை 9 மணி: கோட்டை மைதானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் ▶️காலை 10 மணி: டி.எஸ்.ஆர். மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா ▶️சுனில் மைத்ரா அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு ▶️ மாலை 3 மணி: ராசி மண்டபத்தில் பாஜக சார்பில் கூட்டம் ▶️மாலை 4 மணி: ஜி.வி.என். மண்டபத்தில் அனைத்து சமூகப் பேரமைப்புக் கூட்டம்.

சேலம்; ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநரான சக்திவேல் என்பவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சக்திவேல் என்பவரை சதீஷ்குமார், ராஜ்குமார், பரமசிவம், மற்றும் தங்கதுரை ஆகிய நான்கு பேர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆத்தூர் நகர போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலத்தில் ராகி, கம்பு, திணை, கருப்பு உழுந்து போன்ற சிறுதானியம் பயன்படுத்தி லட்டு, சத்து மாவு, முறுக்கு, அதிரசம், கேக்,பிஸ்கட் தயாரித்தல் பயிற்சி வரும் செப்.10 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது என சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். பயிற்சி முடித்த பின் தொழில் தொடங்க சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 83008-52717 எண்ணை அழைக்கலாம்.

சேலம் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

சேலம் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <

சேலம் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக வரும் 9-ம் மற்றும் 10ஆம் தேதி சேலம்,கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, திருச்சி, மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.