Salem

News January 26, 2025

தேசிய கொடி ஏற்றி வைத்த கலெக்டர் 

image

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 26, 2025

பச்சிளம் பெண் குழந்தை விற்பனை! அதிர்ச்சி தகவல்

image

சேலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 6ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை விற்றதாக சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேரில் விசாரணை செய்ததில், குழந்தையை யார் கவனிப்பது என தெரியாமல் அவரது தம்பி ரமேஷ், ரூ.3.20 லட்சத்திற்கு விற்று, பைக்கியும், வீட்டிற்கு ரூ.1.20 லட்சம் கொடுத்துள்ளார். பின் குழந்தையை மீட்ட போலீசார், சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

News January 26, 2025

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் 2-ம் இடம்

image

“சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது; கடந்த ஓராண்டில் மட்டும் 28.40 கோடி பேர் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்; 2023-ம் ஆண்டு சுற்றுலாக் கொள்கையின் படி 300 இடங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டன. வெளிநாட்டு பயணிகள் வருகையில் தமிழகம் 6ஆவது இடம்” என்று சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

சேலம் மக்களே! உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.

News January 25, 2025

மாநகர காவல் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 25 இரவு அதிகாரிகள் விவரம்.

News January 25, 2025

பிப்.5 வெண்ணங்குடி முனியப்பன் திருவிழா

image

சேலத்தின் காவல் தெய்வமாக நம்பப்படும் அருள்மிகு வென்னங்குடி முனியப்பன் திருக்கோயில் தை மாதம் திருவிழா தொடங்க உள்ளது. வருகின்ற பிப்ரவரி 5ம்தேதி புதன்கிழமை பொங்கல் வைபவம் 6ம் தேதி வியாழக்கிழமை அலகு குத்துதல் வைபவம் நடைபெற உள்ளது. திருவிழாவில் கலந்து கொண்டு வென்னங்குடி முனியப்பன் அருளைப் பெறுமாறு விழாக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மற்ற பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

News January 25, 2025

ரஞ்சி டிராபி;வலுவான நிலையில் தமிழ்நாடு அணி

image

வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணி சண்டிகரை எதிர் கொண்டு ஆடி வருகிறது. இதில் முதலில் விளையடிய தமிழ்நாடு அணி 301 ரன்களுக்கும், சண்டிகர் 204 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.  இதனையடுத்து 2வது இன்னிங்ஸை விளையடிய தமிழ்நாடு அணி 305/5 டிக்ளேர் செய்தது. இதனால் சண்டிகர் அணிக்கு 406 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

News January 25, 2025

இன்றைய இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 25 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 25, 2025

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

image

குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதியின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கவுள்ள ஆட்சியர்!

image

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா-2025 சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளையதினம் 26/01/2025 சிறப்பாக நடைபெறவுள்ளது. இக்குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆ.ப. காலை 08.05 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கௌரவிக்க உள்ளார்.

error: Content is protected !!