Salem

News February 10, 2025

சேலம் பழைய பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து

image

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கருவாட்டு பாலம் பக்கத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து மறுசுழற்சி செய்வதற்காக தயாரிக்கப்படும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தெரியாத பெண்கள் அந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 10, 2025

ஜவ்வரிசியில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை

image

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் பெற்ற பிறகே உணவு வணிகம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி தயாரிப்பில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால் ஜவ்வரிசி ஆலைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்வதோடு நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

குறும்பட போட்டி ரூ.25,000 பரிசு! மிஸ் பண்ணிடாதீங்க

image

“பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம், இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு: <>https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ <<>>என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 9, 2025

மினி பேருந்து விரிவாக்கத்திற்கான அரசாணை

image

சேலம் மாவட்டத்தில் பேருந்துகள் செல்லாத குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு பொதுமக்கள் நலனை கருதி தமிழக அரசு புதிய மினி பேருந்து விரிவாக்க திட்டம் 1-5- 2025 முதல் துவங்க உள்ளதாகவும் அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News February 9, 2025

சேலம் மாநகராட்சி ஆணையர் மாற்றம்

image

ஐஏஎஸ் அதிகாரிகள் 38 பேரை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக இருந்த ரஞ்ஜீத் சிங் தேனி மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்ஜீத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். குன்னூர், நாகப்பட்டினத்தில் பணியாற்றிய இவர், கால்நடை பராமரிப்புத் துறையின் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

News February 9, 2025

நலவாழ்வு அலுவலர் பணிக்கு இன்று நேர்காணல்!

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் காலியாக உள்ள நலவாழ்வு அதிகாரி பணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் இன்று (ஜன.09) நேர்காணல் நடைபெறவுள்ளது. கல்வி தகுதியாக பி.எஸ்.சி நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. முடித்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூபாய் 18,000 வழங்கப்படும்.

News February 9, 2025

சேலத்தில் மண் சரிந்து ஒருவர் பலி

image

ஆந்திர மாநிலம், மரிபோட்டாவைச் சோ்ந்த சிம்ஹாசலம் (50). இவர் சமையல் எரிவாயு குழாய் பதிக்கும் தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். மேச்சேரி ஸ்ரீராமணியூரில் சனிக்கிழமை குழி தோண்டிய போது மண் சரிந்து விழுந்து சிம்ஹாசலம் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனா்.

News February 9, 2025

சேலம் சரகத்தில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

சேலம் சரகத்தில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவுக்கும், செல்வராஜ் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி மத்தூர் ஸ்டேஷனுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் கவிதா குற்றப்பிரிவு ஸ்டேஷனுக்கு மாற்றி, டிஐஜி உமா உத்தரவிட்டார்.

News February 8, 2025

பிப்.11-ல் இறைச்சி கடைகள் இயங்காது!

image

வள்ளலார் தினத்தையொட்டி, வரும் பிப்.11- ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் விற்பனை தடைச் செய்யப்படுகிறது. அரசின் உத்தரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

சேலத்தில் தினந்தோறும் தொடரும் தற்கொலைகள்

image

சேலம் மாநகரில் கடந்த 10 நாட்களாக தினந்தோறும் குறைந்தபட்சம் மூன்று தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது. அதன்படி கிச்சிப்பாளையம் பகுதியில் ஜெயராமன் என்பவரும், அஸ்தம்பட்டி பகுதியில் சசிகலா என்பவரும், சூரமங்கலம் பகுதியில் பிரபாகரன் என்பவரும் இன்று பல்வேறு பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாநகரில் மட்டும் தினமும் தற்கொலைகள் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!