India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, மதுரை-பெங்களூரு சிறப்பு ரயில் (06522) இன்று (மே 01) காலை 09.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், 03.50 மணி நேரம் தாமதமாக மதியம் 01.00 மணிக்கு புறப்படும். இதனால் சேலம் ரயில் நிலையத்திற்கு மதியம் 02.20 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் மாலை 06.10 மணி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி” உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வாழ்த்து.
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் தற்போது பீர் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தற்போது 4 ஆயிரம் பீர்பாட்டில் விற்பனை ஆகிறது.
சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றியவர் சண்முககுமார் (35). இவர் தண்டனை கைதியிடம் பணம் பெற்று மொபைல் போன், கஞ்சா வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளித்த பின், கடந்த பிப்ரவரியில், சண்முககுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சண்முககுமாரை பணி நீக்கம் செய்து சிறை எஸ்.பி. வினோத் உத்தரவிட்டார்.
மோகனப்பிரியன் (20) என்பவர் கடந்த 15-ஆம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்த மோகனப்பிரியனை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்: மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள் ▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077 ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100 ▶️விபத்து உதவி எண் 108 ▶️தீ தடுப்பு, பாதுகாப்பு : 101 ▶️விபத்து அவசர வாகன உதவி : 102 ▶️குழந்தைகள் பாதுகாப்பு : 1098 ▶️பேரிடர் கால உதவிக்கு 1077 ▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091 ▶️வாக்காளர் உதவி எண் : 1950. இதனை மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.
சேலம்: மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள் ▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை : 1077 ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100 ▶️விபத்து உதவி எண் 108 ▶️தீ தடுப்பு, பாதுகாப்பு : 101 ▶️விபத்து அவசர வாகன உதவி : 102 ▶️குழந்தைகள் பாதுகாப்பு : 1098 ▶️பேரிடர் கால உதவிக்கு 1077 ▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி : 1091 ▶️வாக்காளர் உதவி எண் : 1950. இதனை மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஓசூர் நிறுவனத்தின் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் மே.3- ஆம் தேதி காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை சேலம் ஜங்ஷன் அருகில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. கல்வி தகுதி; 12-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை. மேலும் விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கவும்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் நாளை(மே 1) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.