India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக இன்று (ஜூலை 05) முதல் ஜூலை 08 வரை சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று 2 விரைவு பேருந்துகளும், நாளை 2 விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல்!
சேலம் இரயில்வே கோட்டத்தில் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் ரயில்களில் விதிகளை மீறி பயணம் செய்பவர்கள் குறித்து தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 84,295 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6.18 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது
சேலம், சீரங்கபாளையம் அருகே ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இதில், 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்தப் பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பினர். மேலும், புரோக்கர்களாகச் செயல்பட்ட விஜி மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெறவிண்ணப்பிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் செய்யும் நபருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் வழங்குவதாகவும், மேலும் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.
சேலம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் 0427 245 0241. ஷேர் பண்ணுங்க !
சேலம் மாவட்டத்தில் தேசிய நல குழுமத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 40 வயதிற்குட்பட்டோர் https://www.salem.nic.in விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர்/நிர்வாக செயலாளர், சேலம் மாவட்ட நலச்சங்கம், சேலம் – 636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
கேரளா மாநிலத்தில் நடைபெற்ற Para Armwresling போட்டியில், சேலம் மாவட்டத்தை சார்ந்த புஷ்பராஜ் என்பவர் கலந்து கொண்டு, 2 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அவருக்கு வலுத்தூக்கும் சங்கத்தினர், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சேலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜூலை 06- ஆம் தேதி முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை, மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வரும் மே 22- ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.