India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் தினத்தை ஒட்டி, சேலத்தில் உள்ள எம்எல்1, எம்எல் 2, எம்எல்3, எம்எல் 3ஏ உள்ளிட்ட அனைத்து மது பானக் கடைகளும், மதுபானகிளப்புகளை மூட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறி விற்பனை செய்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஏற்காட்டில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்த இளைய கண்ணு என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாணவிகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை வைத்து, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி- நியூஸ் தமிழ்)
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ரூ.1,25,200 முதல் ரூ.2,54,800 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு இந்த <
சேலம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. ஜவ்வரிசி மரவள்ளி கிழங்குகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஜவ்வரிசி தயாரிப்பின் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு தரத்தில் இல்லாத சல்பியூரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம் ஹைப்போ குளோரைடு ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக தெரியவந்தால் ஆலைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.
சேலம் பிப்ரவரி 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 10 மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் .2) காலை 10 மணி பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் கோட்டை மைதானம்.3) காலை 11 மணி வேங்கை வயல் பிரச்சனையை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கருவாட்டு பாலம் பக்கத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து மறுசுழற்சி செய்வதற்காக தயாரிக்கப்படும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தெரியாத பெண்கள் அந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் உரிமம் பெற்ற பிறகே உணவு வணிகம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி தயாரிப்பில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால் ஜவ்வரிசி ஆலைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்வதோடு நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
“பெண் குழந்தைகளை காப்போம்- குழந்தைகளுக்கு பாதுகாப்பு” என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளது. சிறந்த 3 குறும்படங்களுக்கு ரொக்கப்பரிசு முதல்பரிசு- ரூ. 25 ஆயிரம், இரண்டாம்பரிசு- ரூ. 15 ஆயிரம்மூன்றாம்பரிசு- ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு: <
சேலம் மாவட்டத்தில் பேருந்துகள் செல்லாத குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு பொதுமக்கள் நலனை கருதி தமிழக அரசு புதிய மினி பேருந்து விரிவாக்க திட்டம் 1-5- 2025 முதல் துவங்க உள்ளதாகவும் அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் 38 பேரை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக இருந்த ரஞ்ஜீத் சிங் தேனி மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்ஜீத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். குன்னூர், நாகப்பட்டினத்தில் பணியாற்றிய இவர், கால்நடை பராமரிப்புத் துறையின் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.