India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம், தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் ஏரி இயற்கை அழகுடன் கூடிய ஒரு நீர்நிலையாகும். இதைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தி, பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தினால், அது சேலம் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்.19) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகராட்சியில் (19.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கீழ் செயல்படும் மகளிர் திட்ட மையத்தில் ஐடி உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளதாகவும் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடத்திற்கு தகுதியுள்ள விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் மாதம் ஆறாம் தேதிக்குள் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கி வருகின்றனர். அதன்படி கலைஞர் உரிமைத்தொகை கேட்டு மட்டும் 1,10,393 மனுக்கள் வழங்கியுள்ளதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மக்களே, Numaligarh Refinery Limited காலியாக உள்ள 98 Graduate Engineer Trainee, Assistant Officer Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.22, 29,அக்.06,13,20 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கும், மறுமார்க்கத்தில், செப்.23,30,செப்.07,14,21 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஆத்தூர், துலுக்கானூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் புதிதாக வாங்கிய வீட்டுமனையை தனிப்பட்டாவாக மாற்ற, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக சர்வேயர் ஜீவிதாவை அணுகியுள்ளார். அப்போது, ஜீவிதா ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து குமரேசன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். பணத்தை கொடுக்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஜீவிதா கைது செய்யப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மக்களே, ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்காக <
Sorry, no posts matched your criteria.