India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 14 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்
திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் எண்.16843, திருச்சிராப்பள்ளியில் இருந்து மதியம் 13.00 மணிக்கு புறப்படும், 15.02.2025 அன்று விரராக்கியத்தில் (கரூர் அருகே) குறுகிய நேரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, விரராக்கியத்திலிருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (பிப்.14)< "ஆன்லைனில் வரும் சந்தேகமான மற்றும் தேவையற்ற லிங்க்-களை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி சார் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் மாணவி மீதான பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இடம் இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் மட்டும், 145 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள்<
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு சேலம் வழியாக செல்லும் கோவை-பனாரஸ் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்.16-ம் தேதி கோவையில் இருந்து பனாரஸூக்கும், பிப்.22- ம் தேதி பனாரஸில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதால் தற்போது 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள்-3, ஸ்லீப்பர் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
தம்மம்பட்டி அடுத்த கொண்டையம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தம்மம்பட்டி பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவரை சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12515) வரும் பிப்.16,23,மார்ச் 02,09,16 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22643) வரும் பிப்.17,18,24,25,மார்ச் 03,04,10,11,17 தேதிகளிலும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் கட்டாக் ரயில் நிலையத்தில் நிற்காது. ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தர்மபுரியைச் சேர்ந்த இளம்பெண் முதுகில் பாய்ந்த கத்தியினை, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம், சேலம் அரசு மருத்துவமனையின் இருதயம் மற்றும் நுரையீரல் பிரிவு அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் ராஜராஜன், விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் அகற்றி உள்ளனர். மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கத்தியை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த குழுவினரை கல்லூரி முதல்வர் மீனாதேவி பாராட்டினார்.
சேலம் மாவட்டத்தில் சுமார் 9,200 ஏக்கர் பரப்பளவில் பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி, செவ்வாழை, கதலி, நேந்திரன் மற்றும் ஜி 9 போன்ற இனங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மானிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.