India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு வெறும் ரூ.320, 550, 799 பிரீமியத்தில் 15 லட்சம், 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு அறிமுகம். இன்று முதல் (ஜூலை 10) சிறப்பு விபத்துக் காப்பீடு பதிவு கடைப்பிடிக்கப்படவுள்ளதால் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பதிவுச் செய்து கொள்ளலாம்” என சேலம் அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க
சேலம் ஜூலை 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி தமிழ்நாடு அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️காலை 10:15 மணி சோனா கல்லூரியில் முதலாம்ஆண்டு வகுப்புகள் துவக்க விழா▶️ 12 மணி இந்திய புரட்சிகர சோசலிஸ்ட் இயக்கம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ மாலை 6 மணி குரு பூர்ணிமா பூஜைகள்
சேலம் மாவட்டத்தில் தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.onlineppa.tn.gov.in இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 30/11/2025 வரை <
சேலம்: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 10,11,12,13 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு-மைசூரு ரயில் (16316),கன்னியாகுமரி-திப்ரூகர் தினசரி ரயில்(22503),ஜூலை 12-ல் கன்னியாகுமரி-ஸ்ரீ வைஷ்ணவ் தேவி வாராந்திர ரயில் (16317),ஜூலை 13-ல் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ்(22669),எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பல மாதங்கள் ஆகி வந்த நிலையில், நடைமுறையை எளிதாக்கும் முயற்சியாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, இனி விண்ணப்பித்தவுடன் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை 10 தவணைகளாக செலுத்தலாம் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சேலம் தனியார் நிறுவனம் சார்பில் 2 வீடியோ கேமராக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தனியார் நிறுவன ஊழியர்கள் உடனிருந்தனர்.
சேலம் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17008033>>(தொடர்ச்சி 1/2)<<>>
▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.