India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் 25.08.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்; சேலம் டவுன் D. பழனியம்மாள் (94981-67715), அன்னதானப்பட்டி பழனி (94981-84845), கொண்டலாம்பட்டி சின்ன தங்கம் (94981-68290), அம்மாபேட்டை நந்தகுமார் (94981-02546) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரம் பொருளாதாரம் மேம்படும் வகையில், அரசு பல்வேறு நல உதவிகள் கல்வி உதவித்தொகை சுய தொழில் துவங்க கடன் உதவிகள் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் துப்புரவு பணியாளர்களை மலக்குழியில் இறங்கி பணி செய்ய யாரேனும் வற்புறுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கருதி சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. “வாகனம் ஓட்டும் போதும் பயணம் செய்யும் போதும் சீட் பெல்ட் கட்டுவது உயிரைக் காப்பாற்றும்” என அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பை முன்னிட்டு எப்போதும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகர காவல் துறைக்கு அவசர அழைப்புகளுக்கு மக்களுக்கு உதவி செய்வதற்காக, புதிதாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலகுரக வாகனங்கள் ஒன்பது இருசக்கர வாகனங்கள் ஐந்து என மொத்தம் 14 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை துணைக் காவல் ஆணையாளர்கள் சிவராமன் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்தர் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மக்களுக்கான அவசர உதவிகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய உத்தரவிட்டனர்.
சேலம் மக்களே..வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394 Junior Intelligence Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.25,500 முதல் 81,100 வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்.01- ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் 18 முதல் 48 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள 99443- 92870 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
இந்திய தொழில்முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சேலம் மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. செப்.01- ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடக்கும் பயிற்சியில் 18 முதல் 48 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள 99443- 92870 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
சேலம் ஆகஸ்ட் 26 நாளை உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி மண்டலம் குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ▶️பாப்பம்பாடி சுய உதவி குழு கட்டிடம் (பாப்பம்பாடி) ▶️எடப்பாடி துரைசாமி ஜெயமணி திருமண மண்டபம் ▶️ தெடாவூர் மேலவீதி சமுதாயக்கூடம் சடாவூர் கொளத்தூர் சமுதாய நலக்கூடம் கருங்கல்லூர்▶️ ஆத்தூர் ராஜேஸ்வரி திருமண மண்டபம் (தென்னங்குடிபாளையம்) ஷேர் பண்ணுங்க!
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அரசின் நல உதவிகளை சலுகைகளைப் பெற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் மனு கொடுக்க வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று மனுக்களை பெற்றார். மேலும் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.