India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரயில்வேயில் ஜூனியர் என்ஜினியர், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர் உள்பட 2,570 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு Diploma, B.E, B.Tech முடித்தவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு <

சேலம் மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்.அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் உள்ள 5 துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.மல்லூர் துணை மின்நிலையம்,
ஆடையூர் துணை மின்நிலையம்,வேம்படிதாளம் துணை மின்நிலையம்,தெடாவூர் துணை மின்நிலையம்,நங்கவள்ளி துணை மின்நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை!(SHAREit)

சேலம் மல்லூரைச் சேர்ந்த பெருமாள், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கந்தம்பட்டி பைபாஸ் அருகே நடந்து சென்றபோது, 3 நபர்கள் தன்னை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் பறித்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். விசாரணையில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்கிற ‘கொரில்லா செந்தில்’, பிரதாப், சுரேஷ்குமார் ஆகிய மூவர் பணம் பறித்ததை போலீசார் கண்டறிந்து, மூவரையும் கைது செய்தனர்.

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையைச் சேர்ந்தவர் ராஜப்பா (65). வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு படியில் தவறி விழுந்த இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

சேலம்: சூரமங்கலம் காவல் நிலையத்தினர், ஜங்ஷன் பகுதியில் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் விதமாக சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் இராஜஸ்தானைச் சேர்ந்த பிரதீப்குமார், அன்கிட்குமார் என்பதும், ஒன்றரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்.05) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; சேலம் அம்மாபேட்டை பகுதியில் உணவு பகுப்பாய்வு ஆய்வகத்தில் ரூபாய் 8.5 கோடி மதிப்பிலான நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை (அக்.06) காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அதனை இயக்கி பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.05) “YOUR LIFE IS EXPENSIVE FOR US AS WELL.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

சேலம் மக்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 130 Credit Manager, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.