India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி வரை உங்களைத் தேடி அரசு எனும் திட்டத்தின் கீழ் புதிதாக அறிவிக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 150 நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மட்டும் தமிழக அரசின் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 80,277 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகம் தொடங்கியது. கடந்த 23ஆம் தேதி வரை 25 நாட்கள் நடைபெற்ற 150 முகாம்களில் அறிவிக்கப்பட்ட துறைகளின் வாயிலாக 45,409 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மற்ற துறைகளில் 24 ஆயிரத்து 954 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தம் 70 ஆயிரத்து 363 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பல்வேறு உதவித்தொகைகள் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 640 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி, வளர்பிறை முகூர்த்தத் தினங்கள், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஆக.26) முதல் செப்.01 வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் (ஆகஸ்ட் 26) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி மண்டலம் – குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ▶️பாப்பம்பாடி – சுய உதவி குழு கட்டிடம் (பாப்பம்பாடி) ▶️எடப்பாடி – துரைசாமி ஜெயமணி திருமண மண்டபம் ▶️ தெடாவூர் – மேலவீதி சமுதாயக்கூடம் ▶️கொளத்தூர் – சமுதாய நலக்கூடம் கருங்கல்லூர்▶️ ஆத்தூர்- ராஜேஸ்வரி திருமண மண்டபம் (தென்னங்குடிபாளையம்) ஷேர் பண்ணுங்க!
சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் எந்தவொரு நபரும், மலக்குழிகளில் இறங்கி வேலை செய்யக்கூடாது என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறான பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.
சேலம் மக்களே, மத்திய உளவுத்துறையில் பணியாற்ற விருப்பமா? சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உளவுத்துறையில் 394 (ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி கிரேடு-II/டெக்) பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ. 25,500 முதல் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
சேலம் ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாதம் ரூ.43,000 என்ற ஊதிய அடிப்படையில் சூரமங்கலம் வாழ்வாதார மையத்தின் மதி திட்டம் மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்காக வரும் ஆக.29 காலை 10 மணியளவில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இங்கு <
சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.
பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு குமாரசாமிப்பட்டி வேளாண்மை பொறியியல் துறையின் சேலம் செயற்பொறியாளர் அலுவலகத்தையோ (அ) மேட்டூர், ஆத்தூர், சங்ககிரி (அ) தங்கள் பகுதியில் அருகில் உள்ள வேளாண்மை பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று வரை 17 நாட்கள் நடைபெற்ற இந்த அரசு பொருட்காட்சியை 25,191 பெரியவர்களும், 4,108 சிறியவர்களும், கண்டு ரசித்துள்ளனர். 26 அரசுத்துறைகள் ஆறு அரசு சார்பு நிறுவனங்கள் என 32 அரங்குகளும், பொழுதுபோக்குகளும் கொண்ட கண்காட்சி வருகின்ற 21.9.2025 வரை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று வரை 17 நாட்கள் நடைபெற்ற இந்த அரசு பொருட்காட்சியை 25,191 பெரியவர்களும், 4,108 சிறியவர்களும், கண்டு ரசித்துள்ளனர். 26 அரசுத்துறைகள் ஆறு அரசு சார்பு நிறுவனங்கள் என 32 அரங்குகளும், பொழுதுபோக்குகளும் கொண்ட கண்காட்சி வருகின்ற 21.9.2025 வரை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.