India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசு விழாக்கள் மற்றும் கோயில் திருவிழாக்களில் அமைக்கப்படும் ராட்டினங்களால் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நேர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, சேலம் மாவட்ட நிர்வாகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசு விழாக்களில் ராட்டினங்கள் அமைக்கும் நபர்கள் இனிமேல் மாவட்ட நிர்வாகத்திடம் முன்னதாக அனுமதி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://tnhorticulture tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெற உள்ளது. தேர்விற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,சேலம் என்ற முகவரிக்கு அக்.17க்குள் அனுப்ப வேண்டும்.SHAREit

சேலம் மாவட்டத்தில் உள்ள கூடமலை, நத்தக்கரை, மற்றும் புத்திரகவுண்டன்பாளையம்,நங்கவள்ளி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளன.இதனால், இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியச் செயற்பொறியாளர்கள் குணவர்த்தினி மற்றும் உமாராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று மற்றும் தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்கள், வாரம்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், சேலம் அரசு மருத்துவமனையிலும், ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த அடையாள அட்டைகள் வாங்காத நபர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும் தெரிவித்துள்ளார்.

சேலம்: நாளை (அக்.8) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1) சூரமங்கலம் மண்டலம் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மெய்யனூர், 2) செட்டி சாவடி மாரியம்மன் கோவில் அருகில் 3) சங்ககிரி சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை 4) இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் மண்டபம் சந்தைப்பேட்டை 5) கொளத்தூர் பி டி ஆர் திருமண மண்டபம் குரும்பனூர் 6) தலைவாசல் சமுதாய கூடம் வரகூர் 7) ஆத்தூர் கிராம சேவை கட்டிடம் அருகில் பைத்தூர்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (அக். 07) விழிப்புணர்வு புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எந்தவொரு தகவலையும் சமூக வலைத்தளங்களில் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின் பகிரவும். போலி (அ) வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் (07.10.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

சேலம் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய www.sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.