India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 16) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஒன்றியத்தில் 429 வீடுகளும், கொளத்தூர் ஒன்றியத்தில் 379 வீடுகளும், எடப்பாடி ஒன்றியத்தில் 335 வீடுகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 279 வீடுகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 190 வீடுகளும் என மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தகவல்.
கோடை வெயிலால்,சேலம் மாவட்டத்தில் 200 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் பீர் வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே குறைவான சேவை உள்ள வழித்தடங்களில் கூடுதலாகவும், போக்குவரத்து சேவை இல்லாத வழித்தடங்களில் புதிதாகவும், மினிபஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 80 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
சேலம் மாவட்டம் மார்ச் 16 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 10 மணி வேல்மாறன் திருப்புகழ் வழிபாடு தனபாக்கியம் மஹால் (மல்லமுக்கம்பட்டி)▶️ காலை 10 மணி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் (ராசி மஹால்)▶️ மாலை 4 மணி தமிழக வாழ்வுரிமைக் கட்சி கட்சி பொதுக்கூட்டம் இணைப்பு விழா (தாதகாப்பட்டி)
உ.பி – பீகாரில் இருந்து சேலம் வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 2 ரயில்கள், கான்பூர் பகுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்படி, கோராக்பூர்-திருவனந்தபுரம் வடக்கு ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் (12511), வரும் 20, 21, 23, 27, 28, 30, ஏப்ரல் 3, 4, 6, 10, 11, 13, 25, 27ம் தேதிகளில் மாற்றுப்பாதையாக அயோத்தி தாம், மாபெல்ஹாதேவி பிரக்யாராஜ், கான்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.”அமாவாசை கோயில்’ என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்தால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட் சத்து 29 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் வாகீத் (23), முகமது ஷெரீப் (26) ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.