India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) மின் கம்பியாள் உதவியாளர் (Wireman Helper) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதிக்குள் கோரிமேடு பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சித் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். அரசு வேலை தேடும் இளைஞர்கள் இதனை SHARE பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார அலுவலகங்களிலும் நாளை (அக்.11) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் புதிய ரேஷன் கார்டு விண்ணபித்தல் ,குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ரேஷன் தொடர்பான குறைகளையும் தெரிவிக்கலாம்.SHAREit

பெங்களூருவில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக கேரளா மாநிலம், எர்ணாகுளத்துக்கு ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் முதல் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சேலம் வழியாக இயக்கப்படும் மூன்றாவது வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பலகாரப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தக்கூடாது, சமையல் எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். மேலும் தரமற்ற முறையில் பலகாரம் விற்பனை செய்தால் TNFSD consumer app அல்லது 94440-42322 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளியுங்கள்.இதனை SHARE பண்ணுங்க

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது.இதற்கு 10,12, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting ) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு <

சேலம்: அழகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 61). இவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (Additional SP) பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மதியம், இவர் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே தனது நண்பரான தீபனைப் பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது, மாடிப் படிக்கட்டுகளில் ஏறியபோது திடீரென கால் இடறி, கீழே தலைகுப்புற விழுந்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர்.09) “குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழிப்போம், குழந்தை தொழிலாளர் குறித்த தகவல்களை 1098 என்ற இலவச எண்ணில் தெரிவியுங்கள்.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.09) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கஸ்தூரிராஜா, “என்னுடைய மகன் செல்வராகவன் தமிழில் ஜீவி பிரகாஷ் உடன் இணைந்து ஒரு படத்திலும், மேலும் நான்கு படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல மலையாளத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்று ஒரு சிலர் வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர். அவருக்கு அதிகப்படியான பட வாய்ப்பு வருவதாக” கஸ்தூரிராஜா பேட்டியளித்தார்.
Sorry, no posts matched your criteria.