Salem

News October 11, 2025

சேலத்தில் யாசகர் கழுத்து நெரித்து கொலை!

image

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளாளப்பட்டி சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் நேற்று அவரது வீட்டில் உடலில் காயங்களுடன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பெரியசாமி, (19) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 11, 2025

காவலரே கொள்ளையர்:சேலத்தில் பகீர் சம்பவம்

image

சேலம்: ஓமலூர் பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (56), இவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கநகையை 4 பேர் கொண்ட கும்பல் பறித்து சென்றுள்ளனர்.இந்த வழக்கில் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பணி புரியும் சிவக்குமார் (25) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்தநிலையில் சிவகுமாரை சேலம் மாநகர காவல் ஆணையர் அணில்குமார் கிரி சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News October 11, 2025

சேலம் மாவட்டத்தில் 196 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

image

தீபாவளி பண்டிகை வரும் அக்.20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் ஆர்வமாக பட்டாசு வாங்குபவர்கள் சேலம் மாநகரில் பட்டாசு கடை வைப்பதற்கு 210 பேர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தள்ளுபடி செய்யப்பட்டு 196 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

News October 10, 2025

சேலம்: தன்பாத்-கோவை சிறப்பு ரயில்கள் ரத்து

image

சேலம் ரயில்வே கோட்டப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (அக்.11) நாளை தன்பாத்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் (03679) மற்றும் (அக்.14) அன்று கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும், மாற்று ரயில் மூலம் பயணத்தை திட்டமிடுமாறும் கோட்டம் அறிவித்துள்ளது.

News October 10, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை மறுநாள் (அக்.12) சேலம் வழியாக இயக்கப்படும் மதுரை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20671) கிருஷ்ணராஜபுரம் வரையும், பெங்களூரு கண்டோன்மெண்ட்- மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20672) பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News October 10, 2025

சேலம்: நாளை கிராம சபை கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் நாளை கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் அன்று நடக்காமல் (அக்.11) நாளை சனிக்கிழமை நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படுகிறது. அதன்படி நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட சியர் தெரிவித்துள்ளார்.

News October 10, 2025

சேலம் மாவட்டத்தில் 196 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

image

தீபாவளி பண்டிகை வரும் அக்.20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் ஆர்வமாக பட்டாசு வாங்குபவர்கள் சேலம் மாநகரில் பட்டாசு கடை வைப்பதற்கு 210 பேர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தள்ளுபடி செய்யப்பட்டு 196 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.

News October 10, 2025

சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.10) “குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News October 10, 2025

சேலம்: டிகிரி போதும் – இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!

image

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News October 10, 2025

சேலம்: கல்வி மீளாய்வு ஆலோசனைக் கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டிய, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவ மாணவிகளை கணக்கெடுத்து காரணங்களை கண்டறிந்து அனைவரையும் கல்வி கற்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

error: Content is protected !!