India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர்(ஆர்.சி.,) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். செப்.1 முதல், 30 வரை, இணைய வழியில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியாரும், சேலம் கிழக்கு மாவட்ட தி்.மு.க. இளைஞரணி அமைப்பாளரும் வீரபாண்டி பிரபுவின் தாயாருமான லீலா ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஆக.31) உயிரிழந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சேலம் மக்களே..▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <
ரயில்வே தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, செப்.02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரையிலும், மறுமார்க்கத்தில், செப்.03, 10, 17, 24 ஆகிய தேதிகளில் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரையிலும் இயக்கப்படும், என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்திற்கு தாழ்வு தளப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.அந்த பேருந்துகள் இயங்கும் வழித்தடங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன. சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்திலிருந்து இராசிபுரம், தின்னப்பட்டி, தாரமங்கலம், வேம்படிதாளம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் எல்எஸ்எஸ் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது. இப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 15-7-2025 முதல் 29-8-2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் வாயிலாக 77,545 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் 23,716 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய மனுக்களின் மீது வருவாய் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி கலைஞர் உரிமை தொகைக்காக 87,212 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பிரசவ வார்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரசவ வார்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இல்லை என முதல்வர் தேவி மீனாள் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் தாசம்பட்டி சாம்பல் பட்டி இடையில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அதன்படிஈரோட்டில் புறப்படும் ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலானது 1ம் தேதி 2ம் தேதி வரை மொரப்பூர் வரை மட்டுமே இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும் ரயில் மொரப்பூரிலிருந்து 3.47க்கு புறப்படும் என தகவல்
தமிழ்நாட்டிற்கு மூன்று முதலமைச்சர்கள் தந்த மாவட்டம் எனும் பெருமை சேலத்திற்கு உண்டு. 1917இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநகராட்சி தலைவரான ராஜாஜி, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த சுப்பராயன் 1926ம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வராகவும், அடுத்ததாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி என மூன்று முதலமைச்சர்கள் சேலத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.