India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள்
இயங்கி வருகின்றன. மேலும் நாளை புரட்டாசி மாதம் தொடங்குவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் 7.48 கோடி ரூபாய்க்கு இறைச்சி விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 23,128 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு 94.82 கோடி ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கூறினார்.
சேலத்தில் தனது வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சேலம் மாநகராட்சி ஆணையரிடம் கூறியுள்ளார்.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 78 ரயில் நிலையங்களில் கூடுதலாக 1,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இத்தகைய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தாரமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8 மணி முதல் வந்து கொண்டே இருந்தனர். காலை 9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். தேர்வை ஒட்டி அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதிக்கு அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமான சித்தேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என்.நேரு, சேலம் கலெக்டர் உட்பட முக்கிய நபர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
➤ நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் சேலத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ➤ மேட்டூர் அணைக்கு 13,217 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. ➤ கொளத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தில், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ➤ சேலத்தில் 162 மையங்களில் நடைபெற்ற குருப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மிலாது நபியை முன்னிட்டு செப். 17ம் தேதி சேலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை இயக்காது என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ (ம) எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் (ம) கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வினை சேலம் மாவட்டத்தில் 46,856 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 35,909 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரிந்திருந்தனர். சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 162 தேர்வுக் கூடங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.