Salem

News September 21, 2024

சேலம்: 100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்

image

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள வடகுமரை ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு கேட்டு அந்தப் பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் செய்தனர். மேலும் தங்களுக்கு இந்த வேலை இல்லை என்றால், வேற வேலை இல்லை என்றும், அதனால் ஒன்றிய அலுவலகம் உடனடியாக தங்களுக்கு வேலை தர வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமாதானம் செய்த பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

News September 21, 2024

சேலம்: அமைச்சர் தலைமையில் நாளை கூட்டம்

image

திமுக சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், சேலத்தில் மத்திய மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் நாளை (செப். 22) காலை 10 மணிக்கு கேஎம்பி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. அமைச்சர் நேரு தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News September 20, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்” குறித்த ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற அக்டோபர் 14ம் தேதி அன்று தொடங்கப்படவுள்ளது. அதையொட்டி, இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் https://oneyearcourse.editn.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

சேலம்: 17 வயது சிறுமியின் காதல் கணவர் மீது போக்சோ!

image

கெங்கவல்லி பகுதியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு 17 வயது என தெரிந்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பிளஸ் 1 படித்துக்கொண்டிருந்தபோதே அதே பகுதியை சேர்ந்த 21 வயதான வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News September 20, 2024

சேலத்தில் 25 போலீசார் இடமாற்றம்

image

சேலம் மாவட்டத்தில் 25 போலீசார் பணியிட மாற்றம் செய்ய எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தீவட்டிப்பட்டி சீனிவாசன் மல்லூருக்கும், தலைவாசல் பழனியப்பன் எடப்பாடிக்கும், தலைவாசல் முருகேசன் கருமலைகூடலுக்கும், பூலாம்பட்டி தங்கராஜ் கெங்கவல்லிக்கும், சங்ககிரி சிவக்குமார், குமரேசன் கெங்கவல்லிக்கும், சங்ககிரி கருப்புசாமி தலைவாசலுக்கும், ஆத்தூர் பரமசிவம் மல்லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

News September 20, 2024

சேலம் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு

image

சேலம் மாவட்டம் பெரிய வடுகப்பட்டி பகுதியை சார்ந்தவர் மாரியப்பன் தங்கவேல். இவர் இந்திய தடகள வீரர். இவர் பிரான்சில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தடகளப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர். இவர் நேற்று தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உற்சாகமாக மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து அவரை வரவேற்றனர்.

News September 20, 2024

சேலம்: பள்ளி பேருந்து மோதி ஒருவர் பலி

image

கெங்கவல்லி தெடாவூர் புதூர் பகுதியில் வசிப்பவர் வடிவேலு. இவர் நேற்று முன்தினம் (19-09-24) மாலை கெங்கவல்லியிலிருந்து தெடாவூர் புதூருக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரகனூரிலிருந்து கெங்கவல்லி நோக்கி வந்த தனியார் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 19, 2024

எடப்பாடியில் ஒரே நாளில் ரூ.3.65 கோடிக்கு விற்பனை

image

சேலம், எடப்பாடியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. அதன்படி நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.3.65 கோடிக்கு தக்காளி, வெண்டைக்காய், முருங்கைக்காய், கேரட், பீர்க்கங்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் விற்பனையாகின. கடந்த வாரத்தைவிட நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் குறைந்தளவில் காய்கறி விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.

News September 19, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென குறைவு

image

இன்று (செப்.19) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,397 கனஅடியிலிருந்து 2,997 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 107.550 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 74.973 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News September 19, 2024

சேலத்தில் திருமாவளவன் விவாதம் நடத்த அழைப்பு

image

சேலத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், விசிக சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட இளைஞரணி மாநாட்டில் மது ஒழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சனம் செய்பவர்கள் இதை திருப்பி பார்க்க வேண்டும். 4 பேர் எம்எல்ஏ ஆனா போதும், எம்பி ஆனா போதும் என்கிற இயக்கம் அல்ல விசிக; விசிகவுடன் கருத்தியல் விவாதம் நடத்த எத்தனை பேருக்கு திராணி உள்ளது என்றார்.

error: Content is protected !!