India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.28) காலை 06.00 மணி வரை 218.6 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வாழப்பாடியில் 71 மி.மீ, ஆனைமடுவுவில் 50 மி.மீ., எடப்பாடியில் 36 மி.மீ., மேட்டூரில் 24.4 மி.மீ., ஏற்காட்டில் 14.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் 4.6 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் 2,033 பேர் பரிசுகளை வென்றனர். இதில் மாவட்ட அளவில் 653 பேர் முதலிடம் பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக சேலம் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர், பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஷர்மிலி என்பவர், அவரது தந்தையின் ஓய்வூதிய பணத்தை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவரது தந்தையின் ஓய்வூதிய பணத்தை கொடுப்பதற்கு கருவூல அலுவலர் தனபால் ரூ.5000 லஞ்சம் கேட்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தனபாலை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்புக் கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி பெற மாநகராட்சி அதிகாரிகள் 35% வரை லஞ்சம் பெறுவதாக குற்றஞ்சாட்டினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் கருவூல அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். கடந்த வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதனால் பெரும் பரபரப்பில் அதிகாரிகள் உள்ளனர்.
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நாளை செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் தங்களது செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டு செல்லப்பிராணிகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சேலம் ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் ‘தூய்மையே சேவை’ இருவார விழாவினை முன்னிட்டு, ‘தூய்மைப் பணியில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழகத்தின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் கலந்து கொண்டு தூய்மையான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்கள் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் சேலம் கோட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று (செப்.,27) முதல் 30-ந் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கற்களை வீசி போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தப்பிச் சென்ற இருவரில் ஜூமான் என்பவர் போலீசாரைத் தாக்கியதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். பணப்பையுடன் ஓடிய அஸ்ரூவை காலில் சுட்டுப்பிடித்தோம். எவ்வளவு பணம் என்பது கணக்கிடவில்லை. பிடிக்கப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி, வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு அதிவேகமாக நிற்காமல் சென்றுள்ளது. தொடர்ந்து, போலீசார் அந்த லாரியை விரட்டிச் சென்று மடக்கியபோது உள்ளே சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்தது தெரியவந்தது. அப்போது, தப்ப முயற்சித்தவர்களை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
Sorry, no posts matched your criteria.