Salem

News September 23, 2024

சேலத்தில் இன்று திறந்து வைக்கிறார் CM

image

சேலம் கருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.23) காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த டைடல் பூங்கா மூலம் 1,000- க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 22, 2024

சேலத்தில் ஜி.கே.வாசன் பேட்டி

image

சேலத்தில் இன்று ஜி.கே.வாசன் பேட்டி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தன் கட்சியின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள். தென் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதல் வரிசை திமுக ஆட்சியில் தான். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். போதை மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்றார்.

News September 22, 2024

சேலத்தில் 11 தொகுதியில் திமுக வெல்லும்: கே.என்.நேரு

image

2026 சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சேலத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News September 22, 2024

பிரபல ரவுடி சேலத்தில் கைது

image

சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சிடி மணியை சேலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக சி.டி மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டிமணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் கைது செய்துள்ளனர்.

News September 22, 2024

பிரபல ஏ+ கேட்டகரி ரவுடி சேலத்தில் கைது

image

சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சிடி மணியை சேலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக சி.டி மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டி மணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் கைது செய்துள்ளனர்.

News September 22, 2024

சேலம்: பில்லி சூனியம்..பரபரப்பு போஸ்டர்

image

ஓமலூர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல். இந்நிலையில் இவரது படத்தைக் கொண்டு சூனியம் செய்ய அணுகவும் என்று அடிக்கப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு நிலவியுள்ளது. இதனைதொடர்ந்து வெற்றிவேல் தரப்பில் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஓமலூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News September 21, 2024

பாட்டியை பாலியல் தொந்தரவு கொடுத்த பேரன் கைது

image

எடப்பாடி அடுத்த காளி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வள்ளியம்மாள் (80) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வள்ளியம்மாளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தியதில், வள்ளியம்மாளின் மகள் சின்னப்பொண்ணுவின் மருமகன் விக்னேஷ் (22) போதையில் பாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

News September 21, 2024

இளம்பெண் கொலையில் திடுக்கிடும் தகவல்

image

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த 31 வயதான கவிதா ஏற்கனவே 2 முறை திருமணமானவர் என்றும், 3- வது முறையாக திருமணம் செய்துக் கொண்டவர் என்பதும், வேறொருவருடன் தொடர்பில் இருந்ததால் கொலை என காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

News September 21, 2024

சேலம்: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் தொழிற்கல்வி உதவித்தொகைப் பெற www.ksb.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்ற முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் ஆன்லைன் மூலம் வருகின்ற நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News September 21, 2024

நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு

image

“எடப்பாடியில் 72 வயது பாட்டியை 22 வயது பேரன் குடிபோதையில் கற்பழித்து கொலை செய்தது பேரதிர்ச்சியை தருகிறது. மது போதையற்ற சமூகத்தை உருவாக்க தங்களுக்கு சொந்தமான மது உற்பத்தி ஆலையை மூடாது, மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க இருக்கும் திராவிட அரசின் இரட்டை வேடத்தால் பாதிப்படைவது என்னவோ தமிழக மக்கள் தான்” என்று நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரத்னா குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!