India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் தங்கள் குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். என்று சேலம் மாவட்ட ஆட்சியர் தலைவர் இரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சிறுத்தையை சுட்டுக்கொன்றதாக கூறி வீடு வீடாக வனத்துறையினர் விசாரித்து அச்சுறுத்தி வருவதாக கிராம மக்கள் இன்று எம்.எல்.ஏ. சதாசிவத்திடம் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சைமலை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலத்தாங்கரை மலை கிராமத்தை சேர்ந்த பிச்சமுத்து என்பவருடைய தோட்டத்தில் உள்ள பட்டியில் மூன்று கன்றுக்குட்டியை அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை கடித்து உள்ளது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனை சந்தித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் திமுகவின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ-வுமான ராஜேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் 3 முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதைப் பெற்றோர் கண்காணித்து உறுதிச் செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி அருகே உள்ள கீழ்பாலத்தாங்கரை மலை கிராமத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 3 கன்று குட்டியை சிறுத்தை வேட்டையாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதியம், மாலை நேரங்களில் சிறுத்தை உலா வருவதாக அச்சம் தெரிவிக்கும் மலைவாழ் மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம், சோனா கல்வி நிறுவனத்தின் சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் நடிகர் மற்றும் கிரிக்கெட் வீரரான பாஸ்கி கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்பு கலந்துரையாடினார். அவர் பேசும் போது இன்றைய சூழலில் மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும், விளையாட்டினால் உடல் வலிமையுடன் மனவலிமையை அடைய முடியும். இன்றைய வாழ்க்கை சூழலில் இது முக்கியமான ஒன்றாகும் என்றார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை தி.மு.க. இன்னும் நிறைவேற்றவில்லை; தி.மு.க. ஆட்சிக்கு வந்து 40 மாதங்கள் ஆன போதிலும் 10% வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை; சேலம் கால்நடை பூங்காவை ஏன் திறக்கவில்லை?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்டவற்றை வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடம் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துள்ளனர். இது குறித்த குறுஞ்செய்தி சம்மந்தப்பட்ட மக்களுக்கு வந்த நிலையில், தகவலறிந்த தி.மு.க.வின் மகளிரணி நிர்வாகிகள், பா.ஜ.க.வினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.