India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஒடுவன்காடு பகுதியில் ராஜா என்பவரின் 17 வயது மகளும், 15 வயது மகனும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரம். பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தனசேகரன் தலைமறைவு. நில தகராறில் சிறார்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர்த்திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து 3,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பாசனத்திற்கான நீர் தேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சந்தியூர் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் அக்.16-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை முறைகள் ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் ரூபாய் 354 பதிவுக்கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 60 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
சேலத்தில் ஆளுநர் வருகையையொட்டி விமான நிலையம், . மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் 400 போலீசாரும், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அவர் செல்லும் பாதையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாநகரில் கடந்த 9 மாதத்தில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் வருகிறார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் வந்திருக்கும் அவர் பெரியார் பல்கலைக்கழகம் சென்று தங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு மேச்சேரியில் அகில இந்திய நெசவாளர் நல சங்கம் சார்பில் நடக்கும் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ஆளுநர் சிறப்புரையாற்றுகிறார். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 89.920 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 52.559 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு சேலம் மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில் உள்ள வீரபாண்டியார் அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை தாங்குகிறார். திமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கூறினார்.
ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், பருவமழை எச்சரிக்கை காரணமாக சேலம் மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமா என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மாநில அளவிலான SK Memorial Trophy_2024 ஆணழகன் போட்டி சேலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பரிசு வென்ற வீரர்களுக்கு சேலம் மாவட்ட அமைச்சூர் ஆணழக சங்க தலைவர் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் க.சுரேஷ்குமார் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். அப்போது பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு துணைதலைவர் காட்டூர் ஜெ.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.